India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (30) லாரி ஓட்டுநர். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு மாயமானதாக அவரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேடி வந்த நிலையில் இன்று திடீர் திருப்பமாக வடிவேலின் மாமனார், மனைவி உள்ளிட்ட 7 பேர் வடிவேலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் அவினாசி பாளையம் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட போயம்பாளையம் மற்றும் அம்மன் நகர் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு நீங்கள் சுகாதாரமான முறையில் விற்கப்படுகின்றன வா? கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று காலை அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பொது மக்களுக்கு நல்ல மீன்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கோவை வேளாண் கள ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் வரும் 22ஆம் தேதி அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி முதல் 34 டிகிரி வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 5 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மழை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் 300 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் மருந்து தெளிக்கும் பணி நேற்று முதல் நடைபெற்ற வந்து வருகிறது. இந்நிலையில் ஓடைகள் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பருவ கால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் நேற்று (மே.18) பெய்த மழை அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மடத்துக்குளம் பகுதியில் 8 செ.மீ, திருப்பூர் PWD பகுதியில் 6 செ.மீ, வெள்ளகோயில், அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ, வட்டமலை நீர்த்தேக்கம், வடக்கு தாலுகா அலுவலகம், நல்லதங்கால் நீர்த்தேக்கம், ஆட்சியர் அலுவலகம், அமராவதி அணை, மூலனூர் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதிய முதல் இரவு வரை தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மடத்துக்குளம் பகுதியில் 77 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகப்பட்டினம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகோவில் வழியாக செல்கிறது. இந்தச் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்றுவருகின்றன. முதல்கட்டமாக கோவை முதல் பல்லடம் வரை இப்பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது பல்லடம் முதல் வெள்ளகோவில் வழியாக கரூர் வரை இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியில் விரிவாக்க பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் நேற்று வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மானுப்பட்டியில் உள்ள விவசாயி ஒருவரின் இளம் புழு பட்டு வளர்ப்பு மனையில் வேளாண்மை கல்லூரி மற்றும் மணக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பட்டு வளர்ப்பு மையத்தில் அதிக கழிவுகள் வீணாக வெளியேறுவதை அறிந்த மாணவர்கள் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் முறை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கினர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை திருப்பூரில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.