Tiruppur

News October 16, 2025

இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கேயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 16.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

News October 16, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எஸ் ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் அக்.22,29, நவ. 5, 12,19, 26, டிச. மாதத்தில் 3, 10 மற்றும் 17-ம் தேதிகளில் மதியம் 2 முதல் 4.30 மணி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.

News October 16, 2025

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூரில் தீபாவளியை ஒட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காங்கேயம், கரூர், கோவை, பொள்ளாச்சி, சோமனூர், ஈரோடு, பவானி செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தும். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்தும், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும்.

News October 16, 2025

JUSTIN: திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையம்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பூரின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்தும் சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே, பழைய அரசு மருத்துவமனை வளாகம், தற்காலிக பேருந்து நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. சேலம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது.

News October 16, 2025

திருப்பூரில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

image

திருப்பூர் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News October 16, 2025

திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

image

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 இருசக்கர மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்களை வரும் 24ஆம் தேதி நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

திருப்பூர்: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யவும்.

News October 16, 2025

திருப்பூர்: இந்த மெசேஜ் வந்தால் உஷார்!

image

திருப்பூர் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 16, 2025

திருப்பூரில் வெளுக்கப்போகும் மழை!

image

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News October 15, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கே வி ஆர் சரக உதவி காவல் ஆணையர் ஜான் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரம் மற்றும் தொலைபேசி எண் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!