Tiruppur

News July 7, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News July 7, 2025

திருப்பூர் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

திருப்பூர்: ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதால் எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.18190) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் – கோவை – இருகூர் வழியாக இயக்கப்படும். ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டுகிறது.

News July 7, 2025

திருப்பூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 102 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974718>>தொடர்ச்சி<<>>

News July 7, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

திருப்பூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர்: அவினாசி – மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரி
யம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் 9ஆம் தேதி காலை 11 மணி முதல் 12.30 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கிறார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News July 7, 2025

திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி

image

திண்டுக்கல்லில் நேற்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 220 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் டிராகன்ஸ் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 102 ரன்கள் மட்டுமே திரட்டி படுதோல்வியடைந்தது. இதன்மூலம், முதல்முறையாக டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது

News July 7, 2025

திருப்பூர்: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் தெரிந்துகொள்ள <<16973727>>இங்கே கிளிக்.<<>>( SHARE)

News July 7, 2025

கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

image

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.

▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
<>மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க. <<>> (SHARE IT)

News July 7, 2025

திருப்பூர்: மகளை கர்ப்பமாக்கிய ஸ்டெப் ஃபாதர்!

image

திரூப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது தாய் இரண்டாவதாக பகாரைச் சேர்ந்த அபய் குமார்(40) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமானார். இதையடுத்து, தலைமறைவான அபய் குமாரை போலீசார் தேடி வந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று(ஜூலை 6) போலீசார் அவரைக் கைது செய்தனர்.

News July 6, 2025

காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடபட்டது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

error: Content is protected !!