India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூரில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
பல்லடம் தபால் அலுவலக வீதியில் உள்ள நாராயணபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தெய்வசிகாமணியின் நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் கூறப்பட்டதாவது, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருந்திய விதிகள் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி பிளாஸ்டிக் பொருள்கள் காண விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் பதிவு செய்ய இன்று(மே 31) கடைசி நாள் என தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேவம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு திறமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த பரத் குமார்(21), முகேஷ் குமார்(34) மற்றும் சுப்பையா(46) என்பதும், கஞ்சா சாக்லேட் விற்றதும் தெரிய வர அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெருமாநல்லூர் போலீசார் கடந்த 27ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட 1025 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ராஜஸ்தான் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவரான ஜோராராம் குடோன் அவினாசி ராஜன்நகரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குடோனையும், பெருமாநல்லூரில் மாதாராம் என்பவரது மளிகை கடைக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.
சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சியில் உள்ள குளத்தில் பெண் மான் செத்து கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் செத்துக்கிடந்த மானின் உடலை மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 2 வயதுடைய இந்த பெண் மானின் பின்பகுதியில் நாய்கள் கடித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளதாக கூறினர்.
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி இன்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 148 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில் ஆர்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,500 முதல் ரூ.7,906 வரையில் மட்டரக பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் சிவன்மலையில் உள்ளது புகழ்பெற்ற சுப்பிரமணியர் கோயில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலுக்கு படிகட்டுகள், சாலை வழியாகவும் இக்கோயிலை அடைய முடியும். சிவவாக்கியர் சித்தர் இங்கு தங்கி முருகனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இக்கோயிலிலேயே புகழ்பெற்ற உத்தரப் பெட்டி உள்ளது. இந்த பெட்டியினுள், பக்தரர்களின் கனவில் வந்து முருகன் குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்யவர்.
Sorry, no posts matched your criteria.