India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 16வது வார்டு சொர்ணபுரி லே-அவுட், 5வது வீதியில் அன்பழகன் என்பவர் வீட்டுக்கு குழாய் பதிப்பு பணிக்கு 77 மீ., நீளத்துக்கு குழி தோண்டி, ரோடு சேதப்படுத்தியது தெரிந்தது. உரிய அனுமதியும் இன்றி தோண்டியதால் மாநகராட்சி விதிகளின்படி, ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரோட்டை சேதப்படுத்துவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் குற்ற சம்பவங்கள் நடந்தால் காவல் துறைக்கு உடனடியாக அணுகவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

திருப்பூர் மக்களே தேர்தல் நெருங்கி வருவதால் வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது<

திருப்பூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

திருப்பூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

திருப்பூர் மக்களே.., வேலை தேடுபவரா நிங்கள்? தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தி கீழ் இலவச ‘Broadband technician’ பயிற்சியுடன் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பயிற்சி நாட்களில் மாதம் ரூ.12,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

திருப்பூர் மக்களே., மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகல்வ்யா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆசிரியர், நர்ஸ், வார்டன், அக்கவுண்டன்ட் எனப் பல்வேறு பணிகள் உள்ளன. மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கியுள்ள பள்ளி விடுதிகள், பெண்கள் விடுதிகளை நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காலக்கெடு முடிந்தது. ஆக, பதிவு செய்யாத நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் enavum, விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக, உடல் ரீதியாக பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

திருப்பூர் மாநகரில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் கொள்ளை உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க இன்றைய தினம் போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேரம் வந்து பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.