Tiruppur

News March 14, 2025

திருப்பூருக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ திருப்பூரில் அன்புச் சோலை மையங்கல்.
▶ திருப்பூரில் கூட்டு கூடுநீர் திட்டம்.
▶ திருப்பூர்-காங்கேயம்- புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்
▶ பல்லடத்தில் செமி கண்டக்டர். (Share பண்ணுங்க)

News March 14, 2025

திருப்பூரில் குற்றத்தடுப்பு தீவிரம்: 14,000 கண்காணிப்பு கேமரா 

image

திருப்பூர் போலீசார் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவிநாசியில் பழனிசாமி-பர்வதம் தம்பதி குடும்ப தகராறில் உறவினரால் கொலை செய்யப்பட்டனர். குற்றவாளி கைது செய்யப்பட்டார்.மாவட்டம் முழுவதும் 14,000 ‘சிசிடிவி’ கேமரா அமைக்கப்பட்டுள்ளன.பல்லடம், காங்கயத்தில் 25 துப்பாக்கி ஏந்திய ரோந்து குழுக்கள் செயல்படுகின்றன என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிப்பு.

News March 14, 2025

திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களே உடனே பதிவு செய்யுங்க. Share பண்ணுங்க.

News March 13, 2025

ரோந்துபணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

திருப்பூர்: வாழைத்தோட்டத்து அய்யன் கோயில்

image

திருப்பூர், அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். மிகவும் சக்திவாய்ந்த அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால் அங்கு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்பது நம்பிக்கை.

News March 13, 2025

31ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவேற்றம் செய்ய வேண்டும்

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 86 சதவீதம் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு முடிந்தது. மீதமுள்ளவர்களும் 10ஆம் தேதிக்குள் கைரேகை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என கூறினர்.

News March 13, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: திருப்பூர் ஆட்சியர் 

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 8,578 வைட்டமின் ஏ திரவ குப்பிகள் பெறப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

BREAKING: அவிநாசியில் இருவர் வெட்டிக்கொலை

image

திருப்பூர், அவிநாசி அடுத்த துலுக்க முத்தூர் பெரிய தோட்டம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த முதிய விவசாய தம்பதியான பழனிச்சாமி (80), பர்வதம் (70) என்ற இருவரையும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடு திறந்திருப்பதை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 13, 2025

ரேஷன் கார்டு – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில்பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறாத ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை என்றால், அவர்கள் உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் www. www.mpds.gov.in இணையதளம் மூலமாக ரேஷன் கார்டை பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்

News March 13, 2025

மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

image

உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி வாயிலாக உள்ளீடு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!