India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (10-8-24) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெறுவதில் என்பது எந்த மாற்றமும் இல்லை என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி நிலம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்க முகவரி மற்றும் மொபைலில் மாற்றம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஆகிய ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டு சம்பந்தமான மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி இன்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதில் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தவர். பள்ளி நிர்வாகம் பாடத்திட்டம் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி உட்பட பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளியில் பயின்ற உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கக்கூடிய தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் இத்திட்டத்தினை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதில் 900 முதல் 1000 பேர் வரை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று நேரமும் சத்தான உணவு சமைக்கப்பட்ட வழங்கப்பட்ட வருகிறது. ஷேர் பண்ணுங்க!
திருப்பூர் மாவட்டம் பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆகஸ்ட் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து , தளி, கஞ்சம்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முழுவதும் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன் திருப்பூர் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் திருச்சி மண்டலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த சுஜாதா திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ் மற்றும் அனைத்து அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டியும், தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கவிதை, கட்டுரை போட்டிகளும் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகையை வழங்கினர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் 2023-2024-ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு www.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.