Tiruppur

News October 20, 2025

திருப்பூரில் நிலம் வாங்க போறிங்களா?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, <>இங்கே கிளிக் <<>>செய்து ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம்.

News October 20, 2025

திருப்பூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்? தீவிர சோதனை

image

உடுமலை அருகே, தமிழக – கேரளா எல்லையில் கால்நடைத்துறையினர், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சோதனை மேற்கொண்டு வருவதோடு, வனப்பகுதியிலுள்ள காட்டுப்பன்றிகள் திடீரென இறந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தடுப்பு பணியை, சென்னை கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு உதவி இயக்குனர் அகிலன் ஆய்வு மேற்கொண்டார்.

News October 19, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், ஊதியூர் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

News October 19, 2025

திருப்பூர் மக்களே இலவசம்: மிஸ் பண்ணிடாதீங்க!

image

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, இலவச வெல்டிங் மற்றும் பேப்ரிகேஷன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான நேர்காணல் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. இதில் பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923, 9952518441 என்ற எண்னை அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க.

News October 19, 2025

திருப்பூர்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்க் மூலம்<<>> வரும் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க SHARE IT

News October 19, 2025

திருப்பூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 19, 2025

திருப்பூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News October 19, 2025

திருப்பூர் மக்களே அவசியம் பாருங்க! இப்ப முக்கியம்

image

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை<> லிங்கை கிளிக் <<>>செய்தால் போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

திருப்பர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<> லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 19, 2025

திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கே.ஜி.கே நகரை சேர்ந்தவர் முருகன் (57). ஒன்றிய அலுவலக உதவியாளர். இந்நிலையில் நேற்று முன்தினம் மொபட்டில் முருகன் சென்றுள்ளார். அப்போது முத்தூர் சாலையில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு வேன் முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!