India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர், பல்லடம் அரசு கல்லூரியில் இன்று (மார்ச்.29) நடக்கவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில், 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறாலம். இம்முகாம் காலை 10.30 முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. (SHARE பண்ணுங்க.)
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு இருந்த சிவனை வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.
உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி கந்தசாமி கார்டனில் சித்தி விநாயகர், சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் நவசண்டியாக விழா நடைபெறும். இவ்விழாவிவின் முதல் நாள் நிகழ்வாக காலை கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமம்,பூர்ணாஹூதி நடைபெறும்.மாலை சங்கல்பம், கலச வழிபாடு, பூர்ணாஹூதி நடைபெறும். இக்கோயில் சென்று வழிப்பட்டால் கேட்ட வரத்தை அம்மன் அருள்வார். ஷேர் செய்யவும்.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு +2 பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் & வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் & ஆலோசனை முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 240ல் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் முன்னரே திருப்பூரில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீங்க. ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி, மது (ம) கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
திருப்பூர், சேமலைக்கவுண்டம்பாளையத்தில், புகழ்பெற்ற வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறார். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என அழைக்கப்படுகிறார். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம். இத SHARE பண்ணுங்க.
திருப்பூர், பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இதில் முதல்வர் (புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) சு.மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தும்பலபட்டியை சேர்ந்த வசந்தகுமார். இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் படித்து வருகின்றார். பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுடன் வாளவாடி பிரிவு அருகே உள்ள பிரதான கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வசந்தகுமார் தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், தாராபுரம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.