India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
திருப்பூர் அலங்கியம் தளவாய்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். குடிமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்தபோது, தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக 100 எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. இதை விசாரிக்க சென்ற சண்முகசுந்தரம், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மக்களே, விழாக்காலங்களில் ஆன்லைனில் அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள் மூலம், ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருகின்றன. அதனை சரியாக ஆராயாமல், பொருட்கள் வாங்க நீங்கள் பணம் செலுத்தும்போது, மோசடிக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின் பொருட்களை வாங்க வேண்டும் என திருப்பூர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அலுவலர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதுபடி, அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.
அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் தான விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு தாய்மார்களிடமிருந்து தானமாக பெறப்பட்ட 6.25 லிட்டர் தாய்ப்பால் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
திருப்பூரி, வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள்,<
திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.6) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, கருவம்பாளையம், ஆலங்காடு, கல்லப்பாளையம், வெங்கடாசலபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், ராயபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி, கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர் மாநகரில் இன்று இரவு பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு நேரில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, 100 எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.