India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கேயம்- தாராபுரம் வழித்தடத்தில் புதியதாக திருப்பதி முதல் பழனி வரை பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து சேவை குப்பம், கிருஷ்ணகிரி, மேட்டூர், பவானி, ஈரோடு, காங்கேயம், தாராபுரம் வழித்தடங்களில் சென்று வருவதற்கு ஏதுவாக பேருந்து புதியதாக இன்று முதல் இயக்கப்படுகிறது. பழனியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க
அவிநாசியை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறார். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர். (Share பண்ணுங்க).
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
திருப்பூர் அவிநாசியில், சுமார் 2000 ஆண்டுகள் பழமையான லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், நவகிரக தோஷங்கள் நீங்குமாம். பிரதோஷம், அமாவாசை தினங்களில் இங்கு சென்று வழிபாடு செய்தால், திருமணத்தடை நீங்குவதோடு, குடும்ப ஒற்றுமை அதிகரித்து, பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்களாம். திருமணத்தடை, குடும்ப பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை Share பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
திருப்பூர், பருவாய் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் நேற்று புதைக்கப்பட்ட அவரின் உடலை தோண்டி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை மற்றும் போலீசாரின் விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணை காதலித்ததால் வித்யாவின் சகோதரர் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லடத்தைச் சேர்ந்தவர் வித்யா(22). கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ந்தேதி வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்ற போது வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வித்யா உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 4, 5 ஆகிய தேதிகளில், மாவட்டத்தில் சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
பல்லடம் சுற்றுவட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்று தொழிலாக கோழிப்பண்ணை தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் கோழிகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுகின்றன. இதனால் கறிக்கோழிகளின் இறப்பு 5% இருந்து 10% உயர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க காற்றோட்டமான சூழ்நிலையையும் தண்ணீர் தெளிப்பான்களைக் கொண்டு தண்ணீர் பீச்சி அடித்தும் கோழிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
Sorry, no posts matched your criteria.