Tiruppur

News October 21, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர் விவரம்!

image

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் இரவு ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகர கேவிஆர் நகர் சரக உதவி ஆணையர் ஜான் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள.

News October 21, 2025

திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலைப்பேட்டை, அவினாசி, காங்கயம், தாராபுரம் பகுதிகளில் இன்று (21.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பகுதியில் குற்றங்கள் நடந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.

News October 21, 2025

திருப்பூர்: பட்டா பெயர் தெரியணுமா..? CLICK NOW

image

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE! பண்ணுங்க.

News October 21, 2025

திருப்பூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

image

திருப்பூர்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE IT)

News October 21, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் ரயில்வே வேலை!

image

திருப்பூர் பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

திருப்பூர் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

image

திருப்பூர் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின் ‘<>நம்ம சாலை<<>>’ செயலியில் தகுந்த புகைப்படங்கள், ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

திருப்பூர்: டெலிகாம் நிறுவனத்தில் வேலை!

image

திருப்பூரில் வேலை தடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Broadband technician’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 56 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் பங்கேற்றால் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

உடுமலை: ஆற்றில் சிக்கி ஒருவர் பலி!

image

திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி அருகே ஆற்றில் வெள்ளப் பெறுக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மாரியப்பன்(40), மது(36) ஆகியோர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் ஆற்றைக் கடக்க முயன்ற போது பரிசல் கவிந்து, மரியப்பன் அடித்து செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று(அக்.20) மாரியப்பனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

News October 21, 2025

திருப்பூரில் பட்டாசு வெடிக்காத கிராமம்!

image

திருப்பூர்: கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ளது நஞ்சராயன் நகர் பகுதி. இப்பகுதி மக்கள் கூறுகையில், ’பறவைகள் நலன் கருதி நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை. எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களும் இதை ஏற்றுக் கொண்டனர். பண்டிகை கொண்டாட்டம் எங்களுக்கு பட்டாசு இல்லாமல் தான் எப்போதும் உள்ளது’ என்றனர்.

News October 21, 2025

திருப்பூர் பயணிகளின் கவனத்திற்கு!

image

வரும் நவம்பர் மாதத்தில் இருந்து, எர்ணாகுளம் – பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இயங்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்ப, புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நாட்கள் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!