Tiruppur

News December 10, 2025

திருப்பூரில் கொலை! அதிரடி உத்தரவு

image

திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டியனிடம் பீடி கேட்டு ஏற்பட்ட தகராறில் கடந்த ஜூலை மாதம், 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் அவரை கொலை செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இளம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2 ஆண்டுகள் இருவரையும் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News December 9, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேர கொள்ளை சம்பவங்களை தடுத்திடும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் மாநகர காவல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 9, 2025

தாராபுரத்தில் சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

image

தாராபுரம் அருகே உள்ள ராமபட்டினத்தைச் சேர்ந்த செல்லதுரை என்ற கூலித் தொழிலாளியின் மகள் தாரணி. இவர் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News December 9, 2025

திருப்பூர்: கொட்டிக்கிடக்கும் வேலைகள் APPLY NOW

image

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).

2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).

3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).

4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).

5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 9, 2025

திருப்பூர்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

திருப்பூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

திருப்பூர்: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்வும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 9, 2025

திருப்பூர்: ரூ.48,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, விஸ்வாபாரதி நகர், தேவம்பாளையம், கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி,வி நகர், திருநீலகண்ட வீதி, நெசவாளர் காலனி, கமிட்டியார் காலனி, வெங்கடாஜலபதி நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 9, 2025

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(56). இவர் அந்த பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை காரணமாக வஞ்சிபாளையம் சோமனூர் இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!