India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரில் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். மதுபானக் கடைகள், அனைத்து மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல் அக்.3ஆம் தேதி காலை 12 மணி வரையும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சட்ட விரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர். மேலும் அரசு நல திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஜிடிபி வளாகத்தில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற வாராந்திர திங்கள் தின குறைதீர்ப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்தும் பலதரப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த வகையில் இன்று மட்டும் 364 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் வரும் 5ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, புகைப்படம் கொண்டு வர வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை விளையாட்டு அரங்கில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று காலை 9 மணியளவில் இதே விளையாட்டு அரங்கில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதம் தோறும் வரும் அமாவாசை நாட்களில் மேல் மலையனூர் செல்வது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் விளைப்பொருள்களை ஏற்றுமதி செய்ய சான்றிதழ்கள் பெற மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசு, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வேளாண் விளைப்பொருட்களை ஏற்றுமதி மேற்கொள்ள சான்றிதழ் பெறுவதற்காக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்குகிறது.மேலும் தகவலுக்கு வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா மின்னணு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்தில் பார்வையிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக்காக குடைகளுடனும், உதவி உபகரணங்கள் உடனும் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.