Tirupathur

News October 4, 2024

திருப்பத்தூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 8-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங் பட்டதாரி–கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்ற காவலருக்கு பாராட்டு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் நக்சல் தடுப்பு பிரிவு காவலராக பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் பிரபு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு படைபயிற்சி பள்ளி மையத்தில் மாநில அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 100 யார்டு ஸ்டேண்டிங் பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கு மாவட்ட எஸ்பி ஸ்ரேயா குப்தா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News October 3, 2024

திருப்பத்தூரில் முக்கிய உதவி எண்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தற்போது முக்கிய உதவி எண்களை வெளியிட்டுள்ளது. அதில், உங்கள் பகுதியில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மக்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News October 3, 2024

திருப்பத்தூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News October 2, 2024

எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியினை வாசிக்க அனைத்து கிராம பொதுமக்களும் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழியிணையும் ஏற்றுக்கொண்டனர்.

News October 2, 2024

திருப்பத்தூரில் தொடரும் மூதாட்டி கொலைகள்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே 72 வயது மதிக்கதக்க மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்கள். தப்பியோடிய கொலையாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டிகளை குறிவைத்து நடைபெறும் கொலைகளில் இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 2, 2024

திருப்பத்தூரில் 4 மருந்தகங்களுக்கு உரிமம் ரத்து

image

பொம்மிகுப்பம் கிராமத்தில் உள்ள மருந்தகங்களில் போலி மருத்துவம் நடப்பதாக புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் இன்று ஸ்ரீ சபரி மெடிக்கல், SKN மெடிக்கல், ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் சிவசக்தி மெடிக்கல் ஆகிய 4 மருந்தகங்களுக்கு நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.

News October 2, 2024

திருப்பத்தூரில் 208 ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 208 ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணியளவில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் வைத்து கிராமசபை கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

News October 1, 2024

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகின்ற 07.10.2024 அன்று தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள தலைமை கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!