India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அடங்கிய 432 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். மேலும், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சமூக பொறுப்பு நிதி மூலம் புதூர் நாடு உள் வட்டம் மேலூர் கிராமத்தைச் சேர்ந்த நாடக சபா குழுவினருக்கு நாடக கலையை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ1,21,000 மதிப்பிலான மிருதங்கம், ஆர்மோனியம், தபேலா ஆகிய இசைக்கருவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பள்ளித் தெரு பகுதியில் நேற்று அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிலையில், இதற்காக வைக்கப்பட்ட பேனரை இன்று மதியம் கழற்றி எடுத்து வரும் போது மின்சாரம் தாக்கி அயத்தம்பட்டு வாசு(48) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் கனமான மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் பள்ளி குழந்தைகள், முதியோர் யாரும் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்கவும், ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல்வரின் முகவரி – சிஎம் ஹெல்ப்லைன் போர்ட்லட் கலெக்டரேட்டில் மனுக்களை அப்புறப்படுத்துவது தொடர்பான புதிய பணிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். இதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி நாட்றம்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (RSS) சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை முருகன் கோவிலில் இருந்து நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் நகர பகுதியை சேர்ந்தவர்கள், மாதனூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் வார விடுமுறையில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலிசார் ஏலகிரி மலை லாட்ஜ் சோதனை செய்தனர். அப்போது பாலியல் தொழில் ஈடுபட்ட 4 பெண்கள், 2 லாட்ஜ் மேலாளர் உள்பட 13 பேர் மீது ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 52 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக காவலூரில் 18 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை விவரம் – காவலூர் 18 மி. மீ., வாணியம்பாடி 21 மி. மீ., நாட்றம்பள்ளி 24.50 மி. மீ., கேத்தாண்டபட்டி 20 மி. மீ., திருப்பத்தூரில் 52 மி. மீ. மழை பெய்ததாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மழை நேரங்களில் அறுந்து விழுந்துள்ள மின்கம்பிகள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக இதுகுறித்து அவசர உதவி எண்ணான 1912 மற்றும் 9498794987 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த சரத்குமார் (31) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.