India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் கேளிக்கை விடுதிகளில் வருகின்ற (15.08.2025) அன்று ஒரு நாள் மட்டும் மதுபான விற்பனைக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்தரவல்லி அறிவித்தார். மேலும் விற்பனை செய்யப்படுவதாக வரும் புகார்கள் அடிப்படையில் விற்பனை செய்பவர் மீது கடுமை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற (23.08.2025) அன்று முதல் 30 வாரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி நியூ டவுன் நகராட்சி பள்ளி, ஆம்பூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0416 2256166 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <
திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை கொண்ட மொழி அதனை மாணவர்கள் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (13.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் புதூர்நாடு, ஆம்பூர் பொதுமக்களிடம் மொத்தமாக 47 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வருகின்ற (15-08-2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளில் 2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்தர கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுசெலவினம் , தணிக்கை அறிக்கை , குடிநீர் விநியோகத்தின் உறுதி , அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற தலைப்புகளில் விவாதம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார் 9,005 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? மாவட்டத்தின் <
கந்திலி அடுத்த பரதேசிபட்டி ஊராட்சியில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக தொடர் புகார் எழுந்தது. இதை அறிந்த மருத்துவ மற்றும் ஊரக பணி இணை இயக்குநர் ஞான மீனாட்சி அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இதையே தொழிலாக கொண்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தருமபுரி, சேலத்தை தொடர்ந்து தற்போது திருப்பத்தூரிலும் இந்த கும்பலின் அட்டுழியம் தலை தூக்கி உள்ளது.
திருப்பத்தூர் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.