Tirupathur

News August 16, 2025

திருப்பத்தூர்: எம்.எல்.ஏ ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
அக்ரஹாரம் மலை கோயில் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜி இன்று (16.8.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை
விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.

News August 16, 2025

திருப்பத்தூர்: வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருப்பத்தூர்: உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா…? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை(அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 16, 2025

திருப்பத்தூர்: காதல் தொல்லை குடுத்தவர் கைது

image

திருப்பத்தூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும், மைனர் பெண்ணிற்கு அக்கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் நவீன்குமார் என்பவர் காதல் தொல்லை அளித்துளளார். இதுகுறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் நேற்று (15) நவீன்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 16, 2025

திருப்பத்தூர்: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

திருப்பத்தூர்: 10th போதும் மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் அதிகபடியாக 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

திருப்பத்தூர்: ஆடி கிருத்திகை.. இதை மறக்காம பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் இன்று (ஆக.16) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக விரதமிருந்து இன்று திருப்பத்தூரில் உள்ள மயில்பாறை முருகன் கோயிலுக்கு சென்றால் முருகனின் அருளை முழுமையாக பெற முடியும். மேலும் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கந்த சஷ்டிக் கவசம், திருப்புகழ், வேல்மாறல் பாராயணம் உள்ளிட்டவற்றை வீட்டில் இருந்த படியே படித்து முருகனின் அருளை பெறலாம். ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

திருப்பத்தூர்: விமானப்படையில் சேர ஆசையா?

image

திருப்பத்தூர் இளைஞர்களே அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர ஆண்களுக்கு செப்.2,3 மற்றும் பெண்களுக்கு செப்.5,6 தேதிகள் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மையத்தில் நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜன.2001-ஜூலை.2008க்குள் பிறந்தவர்களாகவும், 10,12th,டிப்ளோமோ முடித்தவர்களாகவும் திருமணம் ஆகாதவர்களாகவும் இருந்தால் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். <>மேலும் தகவலுக்கு<<>>

News August 15, 2025

தேசிய கொடி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர் இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News August 15, 2025

திருப்பத்தூர்: பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும்<> இதில் <<>>பெற முடியும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04179-299527) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

error: Content is protected !!