Tirupathur

News April 23, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர்  காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று  இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News April 23, 2025

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

image

திருப்பத்தூர் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெயில் அதிகம் உள்ள நிலையில், மிதமான வானிலை கொண்ட திருப்பத்தூரில் உள்ள சுற்றுலா தலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.ஏலகிரி

2.ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

3.வைன்னு பாப்பு அப்சர் வட்டரி

4.சுவாமிமலை

5.நிலாவூர் ஏரி

6.கோவிந்தபுரம் அருவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களுக்கு ஷேர் பன்னி இதெல்லாம் இருக்குனு சொல்லுங்க

News April 23, 2025

திருப்பத்தூர்: பார் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்  இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்  அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம். 

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART’<<>> இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

அங்கன்வாடி ஊழியர் பணி.. இன்றே கடைசி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 20 அங்கன்வாடி பணியிடங்கள், குறு அங்கன்வாடி பணியிடங்கள், 15 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, <>இந்த<<>> இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்றே கடைசி நாள் என்பதால் மறக்காம ஷேர் பண்ணுங்க.

News April 22, 2025

திருபத்தூரில் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சமூக வலைதள பக்கத்தில் போதைப்பொருட்களை பொதுமக்கள் மாணவச் செல்வங்கள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற தீய செயல்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் இதே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மக்களின் நலனில் நமது திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் என்று தெரிவித்துள்ளது.

News April 22, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று ஏப்ரல் 22) இரவு) ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.

News April 22, 2025

திருப்பத்தூர் : மாற்றம் வேண்டுமா இங்கு போங்க

image

பிரம்மா செய்த தவறால் சிவனுக்கு கோவம் வந்து பிரம்மாவை சபித்தார். சாபத்தை நீக்க கோயில்களுக்கு செல்லும் வழியில் திருப்பத்தூர் வந்து அருகேயிருந்த குளத்தின் நீரை வழங்கி சிவனை வழிபட்டார் . அதனால சிவன் சாபத்தை நீக்கினார். அதன்பின் இந்த இடம் ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது. இந்த கோயிலில் தரிசித்தால் வாழ்வில் மாற்றம் கிடைக்குமென்பது நம்பிகை, மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பகிரவும்.

News April 22, 2025

மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு <>மின்சார வாரியத்தின் <<>>அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 22, 2025

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 21) மாலை ஹவாரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஜோலார்பேட்டை வரும் ரயில்களை சோதனை நடத்திய போது பொது பெட்டியில் 4 மூட்டையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 7 லட்சம். இதனை சென்னை போதை பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!