Tirupathur

News April 25, 2025

ரோந்து பணியில் உள்ள காவலர் அதிகாரிகளின் விவரங்கள்

image

இன்று (ஏப்ரல்.25) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் காவல் நிலைய ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் மாவட்ட காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இரவில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக இந்த எண்ணிற்கு அழைக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News April 25, 2025

திருப்பத்தூரில் புதிய தொழில் பூங்கா அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று புதியதாக சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தொழில் பூங்கா அமைக்க சட்டமன்றத்தில் அறிவிப்பாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

News April 25, 2025

திருப்பத்தூர் சுவாமி மலை ட்ரெக்கிங்

image

திருப்பத்தூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக ஏலகிரி சுவாமி மலை உள்ளது. வனத்துறை மூலம் மங்கலம் கிராமத்தில் தொடங்கும் இந்த மலையேற்றம் புது அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.499 வசூலிக்கப்படும் நிலையில், https://www.trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் போகலாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க.

News April 25, 2025

திருப்பத்தூரின் முக்கிய தொடர்பு எண்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட வட்டாச்சியர் அலுவலக மற்றும் வட்டாட்சியர்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் 04179-220091, 9445000511
வட்டாட்சியர் அலுவலகம், நாட்றம்பள்ளி 04179-242499, 9445461815
வட்டாட்சியர் அலுவலகம், வாணியம்பாடி 04174-232184, 9445000512
வட்டாட்சியர் அலுவலகம், ஆம்பூர் 04174-244255, 9443000478
உங்க நண்பர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 25, 2025

திருப்பத்தூரில் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பத்தூர் – 04179 221320, ஆம்பூர் – 04174 246204, வாணியம்பாடி – 04179 235100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

News April 25, 2025

ஆம்பூரில் காட்டன் சூதாட்டம் நடத்திவர் மீது வழக்கு

image

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி பாங்கி ஷாப் பகுதியில் (நேற்று ஏப்ரல் 24 மாலை) உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்திய பாங்கு ஷாப்பிங் பகுதியை சேர்ந்த ரமியுல்லா வயது (52) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2025

திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News April 24, 2025

திருப்பத்தூர்: கேக் வெட்டிய ஆசிரியர்கள் மீது அதிரடி

image

திருப்பத்தூர், சின்னவரிகம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சுதாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் ஏப்.,22 அன்று தங்களது திருமண நாளை முன்னிட்டு பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி இருவரையும் முறையே உதயேந்திரம் மற்றும் வெங்கிளி பள்ளிக்கு அதிரடியாக இடம் மாற்றியுள்ளார். *உங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு பகிரவும்*

News April 24, 2025

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை(ஏப்.25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம். தகுதியானவர்கள் நேரில் தேர்வாகி உடனடி பணிநியமனம் செய்யப்படுவர். ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!