India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருப்பத்தூரில் மட்டும் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காவலூர் மலைரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வின்போது 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் குறும்படங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 02-03-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் குறும்படம் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் <
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரிய கோமேஸ்வரம் பகுதியில் (நேற்று பிப்ரவரி 22)காலை ரெட்டி மாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாபு ராவ் மகன் ராஜேந்திரன் வயது (49)கீரை வியாபாரி நேற்று காலை சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராஜேந்திரன் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து ஆம்பூர் தாலுக
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் பைக் ரேஸ் வீலிங் குறித்து நேற்று பிப். 21 Way 2 News செய்தி எதிரொலியாக மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் உத்திரவின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் சம்பந்தப்பட் தனியார் மெடிக்கல் கல்லூரிக்கு நேரில் சென்று பைக் ரேஸ் வீலிங் விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்.21) காலை ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கிச்சென்ற வேன் சாலை நடுவே தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது, விபத்துக்குள்ளானது. விபத்தில் வேன் ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், இதுகுறித்து, ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்துார் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகேரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில், இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைகுந்மாலிக், தனஞ்சய்மாலிக் இருவரும் ரயிலில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.