Tirupathur

News January 28, 2025

உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர், குரிசிலாப்பட்டு, மிட்டூர், ஆண்டியப்பனூர், குரிசிலாப்பட்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 05 மணிவரை உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கல்வி உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும், இதில் பங்கேற்று  பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஒருவர் பலி

image

ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று காலை 8 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை 2ல் நின்று புறப்பட்டது. அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கு விரைந்து சென்று  ரயில்வே போலீசார் இறந்தவர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 27, 2025

மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம், 2023-24ஆம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு 100 மதிப்பெண்கள் மற்றும் 99 மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞரின் நூற்றாண்டு தமிழ் ஊக்குவிப்பு நிதியை ஆட்சியர் வழங்கினார். உடன் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் இருந்தனர்.

News January 27, 2025

கிராம சபா கூட்டத்தில் பெருந்தலைவரிடம் மனு அளித்த மக்கள்

image

76 ஆவது குடியரசு தினவிழாவைமுன்னிட்டு  திருப்பத்தூர் மாவட்டம். மாதனூர்அடுத்த அகரம்சேரி ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் வச்சலாராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுரேஷ்குமார் அவர்களிடம் பொதுமக்கள் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிதர கோரிக்கை மனு அளித்தனர்.

News January 26, 2025

ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2025) 75 ஆவது குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News January 26, 2025

5 பாக்ஸ் மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

image

திருப்பத்தூர் டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையில் தனிப்படையினர் திருப்பத்தூர் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், சௌடேக்குப்பம் சேர்ந்த மணிவேல் என்பவர் 5 பாக்ஸ் மது பாட்டில்கள் கள்ளத்தனமாக கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலிசார் கார் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்து வாலிபர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 26, 2025

தவணை தொகை செலுத்த சென்ற பெண்ணிடம் பாலியல் தொந்தரவு

image

திருப்பத்தூர் அருகே மடவாளம் சேர்ந்த ரத்னா, திருப்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் தனது கணவருக்காக புதிய மோட்டார் சைக்கிளை வாங்க கடன் வாங்கி, மாதம் தோறும் கட்டி வருகிறார். நேற்று ரத்னா தவணை தொகை செலுத்து சென்ற போது, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கவியரசு, ஆனஸ்ட்ராஜ் இருவரும் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்தனர். புகாரின்பேரில், போலீசார் கவியரசு கைது செய்து சிறையில் அடைத்து, மற்றொருவரை தேடி வருகின்றனர்.

News January 26, 2025

திருப்பத்தூரில் 15ஆவது தேசிய வாக்காளர் உறுதிமொழி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 15ஆவது தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி வாக்காளர் தின உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு துறையை சார்ந்த அனைத்து அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் தளபதி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

News January 25, 2025

நாளை ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் கொடியேற்றுகிறார்

image

76ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை காலை பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் போலீசார் அணிவகுப்பு ஏற்றுக்கொண்டு பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளனர்.

News January 25, 2025

நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் ஆண் சடலம்

image

நாட்றம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி (ஆசிரியர்) என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், கந்திலி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!