Tirupathur

News March 6, 2025

தேசிய நெடுஞ்சாலையில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து!

image

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வேலூர் நோக்கி சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் பயணித்த இருவர், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளனர்.

News March 6, 2025

புதர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

image

திருப்பத்தூர்: நாச கவுண்டர் வட்டம் பகுதியில் புதர்களுக்கு தீ வைத்த மர்ம நபர். கதிரிமங்கலம் பகுதியில் நேற்று (மார்ச் 5) மாலை வேலையில் மர்மநபர்கள் புதர்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனை கண்டஅப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News March 6, 2025

தகாத உறவை கண்டித்தவர் கொலை

image

கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்- துளசி தம்பதியினர் கடந்த, 1ம் தேதி தாய் வீட்டுக்கு துளசி சென்றார்.அன்று தனியாக இருந்த ஆனந்த், மறுநாள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் பலனின்றி உயிரிழந்தார். போலீசார், சிலம்பரசன் என்பவரை கைது செய்து விசாரித்ததில் ஆனந்தின் அக்கா, சிலம்பரசன் இருவருக்கும் தகாத உறவை தட்டிக்கேட்ட ஆனந்தை சிலம்பரசன் சரமாரியாக தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

News March 6, 2025

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இ-பிளாக் தளத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வருகிற 4-04-2025 அன்று நடைபெற உள்ளது. இதில் மண்டல இணை இயக்குநர் பங்கேற்க உள்ளார். ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை வருகிற 15-03-2025க்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News March 5, 2025

செங்கிலிகுப்பம் டாக்டர் வீட்டில் 150 சவரன் நகை திருட்டு?

image

செங்கிலிகுப்பம் பகுதியில் மனைவி மர்ம மரணம் வழக்கில் தலைமறைவாக இருந்து, கைதாகி நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்த டாக்டர், நேற்று மாலை அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த 150 சவரன் தங்க நகை, 2 லட்சம் பணம் திருடுபோனதாக 100க்கு டயல் செய்து கூறியுள்ளார். இதையடுத்து ஆம்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். திருட்டு குறித்து உறுதியான தகவல் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News March 5, 2025

கணவன்-மனைவி பிரச்சனையில் மனைவி தற்கொலை 

image

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்தவர் கலைவாணி இவருக்கு திருமணம் ஆகி கடந்த 10 வருடங்களாக கணவன் மனைவி பிரச்சனையால் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார், இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

News March 5, 2025

101 டிகிரி வெயில் பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

ஆம்பூர், திருப்பத்தூரில் நேற்று (மார்.4) 101 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது. இனி வரும் நாட்கள் முழுவதும் வெயில் இப்படித்தான் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடை கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 4, 2025

நாயக்கனேறி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் நாயக்கனேறி ஊராட்சி பகுதியை சேர்ந்த கண்மணி மனதில் சகுந்தலா வயது (40) கூலி தொழிலாளி கடந்த 28 தேதி அரளி விதை குடித்து தற்கொலை முயற்சி அவரை உறவினர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை சேர்ந்த நிலையத்தில் (இன்று மே.4 இரவு) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக இன்றைக்குள் (மார்ச்.04) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

error: Content is protected !!