India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி (04179222111)
▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷ்ரேயா குப்தா (04179-221105)
▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன் ( 04179290391)
▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி ( 7305089501)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் இந்த விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க அருமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறக்க கோடைகால இலவச பயிற்சி முகாம் அரசு சார்பில் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் வரும் மே.15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 7401703463. பெற்றோர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி (17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்ற மதி நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் மே 28 முதல் 1லட்சத்து 29ஆயிரம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.சிவசுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த நோய் சிறுநீர், சாணம் போன்றவற்றின் மூலம் வேகமாக பரவுவதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் போடப்பட்ட ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரம் சேமிக்கப்படுகின்றன.
திருப்பத்தூரில், பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கிவிட்டது. இந்த விடுமுறையை கழிக்க நம்ம திருப்பத்தூரிலேயே TOP 5 இடங்களை பார்க்கலாம்.
▶ ஏலகிரி மலை
▶ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி
▶வைன்னு பாப்பு அப்சர்வட்டரி
▶ கோவிந்தபுரம் அருவி
▶ அண்டியப்பனூர் டேம்
இந்த இடங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் என்ற பலே கில்லாடி கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் அம்பலம் ஆகவே தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற மோசடியில் சிக்காமல் உஷாரா இருங்க.
திருப்பத்தூர் பெயருக்கு பின்னால் பல காரணங்களுக்கள் சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் இதற்கு “திருப்பத்தூர்” என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், திருவனபுரம் என்று அழைக்கப்பட்டு வந்ததை விஜயநகர மன்னர்கள் திருப்பத்தூர் என மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
உங்களைப்போல் உங்கள் நண்பர்களும் தெரிந்துக்கொள்ள இதனை ஷேர் பண்ணுங்க!
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான்.(SHARE IT).
திருப்பத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.