India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் யாசீர். இவர், நேற்று (மார்.8) காலை வெளியே சென்றுள்ளார். அப்போது, மனைவி ஆயிஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டிற்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிம்மணபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45) தனது மகன் பாலாஜி (25) உடன் கடந்த மார்ச் 1ஆம் தேதி பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் (மார்.6) பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் ராஜேஸ்வரி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். பரோட்டா சாப்பிட்டு தான் உயிரிழந்தாரா ? வேறு காரணமா? என நடந்து வருகிறது.
திருப்பத்தூர் பசிலி குட்டையில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி அறுபடை ஸ்ரீ முருகன் கோயில். நினைத்ததை வேண்டி பால்குடம்,காவடி எடுத்து, அழகு குத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். இங்கு வேண்டினால் கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
ஜோலார்பேட்டை அடுத்த ஊசி நாட்டன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மகா இவருக்கு அடிக்கடி வயிற்று வலி அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த மாத்திரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் வீட்டிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசு திறன் மேம்பாட்டுதுறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு தொழில்முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை 10.03.2025 அன்று காலை 9 மணி முதல் நடைபெறும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தாட்கோ மூலம் திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பிஎஸ்சி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகம் இரண்டு ஆண்டு முழு நேர பட்ட படிப்பும் ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டைய படிப்புக்கு www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மதமான ரமலான் கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கியது.இந்த மாதம் முழுவதும் சூரியன் உதயம், மறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நோன்பு நோற்பது வழக்கம். இதன் காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் நோன்பு நோற்கும் நேரம் சற்று மாறுபடும். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நோன்பு வைக்கும் நேரமும் நோன்பு திறக்கும் நேரமும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.