Tirupathur

News March 10, 2025

மாணவி பாலியல் தொல்லை; நீதிமன்றத்தில் சரண்டர்

image

ஆம்பூர் தாலுக்கா வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீகன் பால் வயது (33). இவர் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பார மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜன.21 ஆம் தேதி ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 49 நாட்களாக தனிப்படை போலீஸ்காரர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று சிகான் பால் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.

News March 10, 2025

பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

image

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 10, 2025

ஜோலார்பேட்டை டாஸ்மாக் அருகே வாலிபர் சடலம்

image

ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே, அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை அருகே உள்ள கிணற்றில், ஆன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே பொதுமக்கள் கூட்டம் அங்கே அலைமோதியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 10, 2025

தென்பெண்ணை – பாலாற்றை இணைக்க வேண்டும்

image

நான் இருக்கின்றபோதே தென்பெண்ணை – பாலாற்றை இணைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று அமைச்சர் துரைமுருகன் நேற்று (மார்.9) வானியம்பாடியில் தெரிவித்தார். மேலும், “சாத்தனூர் அணை நிரம்பி அதைத்தாண்டி போகும் என்ற நிலை ஏற்படும் போது அந்த தண்ணீரை திருப்பி காக்கங்கரை வழியாக பாலாற்றில் விட்டால் பாலாற்றில் தண்ணீர் போகும். அந்த தண்ணீரை தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்தால் விவாய நிலங்கள் பாசன வசதி பெறும்” என்றார்.

News March 9, 2025

திருப்பத்தூரில் அரசு வேலை

image

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நாளைக்குள் (மார்ச்.10) விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 9, 2025

அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எ.வ.வேலு

image

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்காக விடுதி அமைக்க நேற்று (மார்.8) அடிக்கல் நாட்டபட்டது. இதில், அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார். இதில், கலெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 9, 2025

அரசு பேருந்து மோதியதில் பெண் பலி

image

நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி இவர் நேற்று தனது வாகனத்தில்  நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் போது சண்டியூர் பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் ஜானகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பகுதி விசாரணை செய்து வருகின்றனர்.

News March 8, 2025

ஆம்பூர் அருகே மின்சார ரயில் கம்பி பழுதால் வழியில் நின்ற ரயில்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று ரயில்வே தண்டவாளத்தின் மேலே செல்லக்கூடிய மின்சார கம்பி பழுதானதால் ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய ஹவுரா விரைவு ரயில் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே துறையினர் பழுதான கம்பியை சரிசெய்தனர்.

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

error: Content is protected !!