India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் வாகனங்கள் ஓட்டும்போது, வாகன ஓட்டிகள் தவறாமல் சீட் பெல்ட் அணியவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளது. இதன்மூலம் பயணத்தின் போது விபத்தில்லாமல் பாதுகாப்பாக செல்லலாம்.
நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில், சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கவிதா என்ற பெண்மணியும் காரில் வந்த ஒரு இளைஞரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
திருப்பத்தூர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த வீரபத்திரன் (31) என்பவர் வீட்டுக்கு கடந்த பிப்.03 அன்று நள்ளிரவு நேரத்தில், வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், வீரபத்திரன், அவரின் மனைவி சத்யா (28) ஆகியோரை கத்தியால் வெட்டினர். மேலும், சத்யாவை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த நபர்கள், 15 சவரன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் காட்பாடியைச் சேர்ந்த 5 பேரைக் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று தனது சமூக வலைத்தளத்தில், பொது மக்கள் ஆன்லைனில் வாகனம் வாங்கும் போது முன்பணம் கட்டினால் தான் வாகனம் தருவோம் என கூறினால் முன்பணம் கட்டி ஏமாற வேண்டாம். மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, உமராபாத் மற்றும் ஆம்பூர் நகர காவல்நிலையங்களில் பணி புரியும் தனிப்பிரிவு காவலர்களை அதிரடியாக மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா இன்று (12.02.2025) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மலையாம்பட்டு ஊராட்சி அனுமந்தராயபுரம் பகுதியில் நேற்று தேசிங்கு ராஜ் வயது (56) என்பவர் வீட்டில் அரசு அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டுக்கு பறிமுதல் செய்து நேற்று இரவு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தை பௌர்ணமியை முன்னிட்டு திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு 90 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று 11-02-2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும் பௌர்ணமி அன்று திரளான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு செல்வார்கள். கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிக பேருந்துகள் இயக்குவதாக திருப்பத்தூர் பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் சமூக வலைத்தளம் பக்கத்தில், சிசிடிவி கேமரா பொருத்துவோம் பாதுகாப்பாக இருப்போம் என பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டின் முன்புறம் மற்றும் சாலையோரம் உள்ள கடைகளில் அதன் உரிமையாளர்கள் சிசிடிவி கேமரா பொருத்தி குற்றங்களை தடுக்கலாம். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காண உதவுகிறது என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.