India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் <
நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், அதேப் பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று (மார்.12) இரவு வேலை முடித்து விட்டு தனது பைக்கில் வீடு திரும்பக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோர தடுப்பு மீது பைக் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்பூர் தாலுகா பணங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இனிய குமார் வயது (26). ஆட்டோ டிரைவரான இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்த வழக்கில், நேற்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மீனாகுமாரி ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
வாணியம்பாடி அடுத்த சிமுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ப.சதிஷ் (13), கடந்த 7ஆம் தேதி அன்று பள்ளத்தூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் வேடிக்கை பார்க்க தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக காளை சிறுவனை முட்டியது. படுகாயம் அடைந்த சிறுவன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (மார்.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
திருப்பத்தூர் டவுன் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (63), கடந்த 2022ஆம் ஆண்டு டிச., மாதத்தில் 5 வயது சிறுமியை பிஸ்கெட் தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜை கைது செய்தனர். குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை, ரூ.6,000 அபராதமும் விதித்து நீதிபதி நேற்று (மார்.11) தீர்ப்பளித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் முகமது (வயது 24). மளிகைக்கடை உரிமையாளர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசீம் முகமது நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குறும்பகேரி புதூர் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவர் கடந்த 17.12.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி சாலையில் விளையாடிக்கொண்டு இருந்த போது சிறுமியிடம் பிஸ்கட் தருவதாகக்கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தனர்.
திருப்பத்தூரில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.