Tirupathur

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து <>கொள்ள<<>> கிளிக் செய்யவும்.

News March 17, 2025

பணிநியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 435 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார்.

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 15, 2025

திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்.15) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 100க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளன. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News March 15, 2025

இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

10 சவரன் செயினை திருடிய மர்ம நபர்கள்

image

அம்பூர்பேட்டையைச் சேர்ந்த ஷீலா (60), தனது மருமகள் சிந்து (34) உடன் நேற்று முன்தினம் (மார்.13) இரவு ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

News March 14, 2025

OTP எண் கேட்டு வரும் அழைப்புகளை தவிர்க்கவும் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது: உங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கல்வி உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த OTP எண் தெரிவிக்குமாறு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சைபர் குற்ற உதவி 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

News March 14, 2025

மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் சார்பில், பொதுமக்களுக்கு தினமும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மார்.13) திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் அதிக நேரம் செல்போன் பயன்பாட்டில் மூழ்காதீர்கள் என்றும், அப்படி அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் பல்வேறு வகையான சைபர் குற்றங்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, விழிப்புணர்வுடன் இருங்கள்.

News March 14, 2025

ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

image

நாட்றம்பள்ளி அருகே பச்சூரில் போலி மருத்துவர் ராமச்சந்திரன் (50) நேற்று (மார்.13) கைது செய்யப்பட்டுள்ளார். கவுண்டப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பச்சூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதையறிந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!