Tirupathur

News February 15, 2025

அரசு பள்ளியில் திருக்குறள் சிறப்பு வகுப்பு!

image

திருப்பத்தூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலை பள்ளியில் நேற்று திருவள்ளுவர் வெள்ளி விழாவை முன்னிட்டு ரோட்டரி சங்கம் நிர்வாகி மனோகரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் பற்றிய சிறப்பு வகுப்பு நடத்தினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

News February 15, 2025

மரமே கோயிலாக விரிந்திருக்கும் கோவில்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் கிராமத்தில் இயற்கை அழகு நிறைந்த ஒரு மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாப்பாத்தி அம்மன் கோயில். கோயில் என்றால் இங்கு அழகிய கட்டுமானம், கோபுரம் என்று எதுவும் கிடையாது. ஒரு மரமே விரிந்து பரந்து கோயிலாக மாறி இருக்கிறது. இங்குக் கோயிலைக் கட்ட முயன்றாலும் அது முடிவதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

News February 15, 2025

தலைமை காவலருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த சித்தூர் கிராமத்தை சார்ந்த தலைமை காவலர் காளிதாஸ் சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று புதுார் நாடு அடுத்த சித்தூர் கிராமத்தில் அவரது உடலை அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 15, 2025

இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. பேர்ணம்புட், சின்னவரிகம், துத்திப்பேட்டை, உமராபாத், மிட்டலம், நரியம்புட், அழிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், மொரசப்பள்ளி, உப்பரப்பள்ளி, பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதாலம்புட், ராஜபுரம், வடபுதுப்பேட்டை, ஆம்பூர், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

News February 14, 2025

காதலர் தினத்தில் வெறிச்சோடிய ஏலகிரி மலை

image

ஏலகிரி மலையில் இன்று காதலர்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்த்த நிலையில், கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியாக காணப்பட்டது.

News February 14, 2025

அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

image

மதுரவாயல் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி. கலைச்செல்வம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக, சோதனை நடந்து வருகிறது. யாரும் வீட்டில் இல்லாத நிலையில் அவரது உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

News February 14, 2025

திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில், இன்று  வெளியிடப்பட்ட சமூக வலைத்தள செய்தி குறிப்பில், உங்களது அனைத்து வகையான கடவுச்சொற்களை (Password) யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வைத்துக் கொள்ளவும் என காவல்துறையினர் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மற்றும் முகநூல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

News February 14, 2025

இளைஞர்களே உங்கள் ரீல்ஸ் திறைமையை காட்டுங்க!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட மக்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று தங்களின் திறமைகளை வெளிக்காட்ட அழைப்பு விடுத்துள்ளது. வினாடி வினா, ரீல்ஸ், போட்டோகிராபி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்குபெற ஆட்சியர் அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை வரும் 28-2-2025 தேதிக்குள், மேலே உள்ள படத்தில் இருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கவும்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

வாணியம்பாடியில் வாகனம் மோதி தலைமை காவலர் உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காளிதாஸ் என்ற தலைமை காவலர் நேற்று (13.02.2025) பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது வாணியம்பாடியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்துள்ளார், இவ்விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!