India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சிவசௌந்தரவள்ளியை இன்று (17) உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கத்தினர் சந்தித்தனர். திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளின் குறைகளை, ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆம்பூரில் இருந்து தனது இல்லத்திற்கு இன்று (பிப்.17) ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோவிலேயே 80 ஆயிரம் பணப்பையை தவறவிட்டுள்ளார். அதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணைத் தேடிச்சென்று பணப்பையை ஒப்படைத்தார். இதனை பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டலாமே!. ஷேர் பண்ணுங்க.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி பகுதியில் நேற்று (15-02-2025) துப்புரவு பணியாளர்கள் மின்கல வாகனங்களில் குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது மற்றும் கட்டுமான பணிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் பார்வையிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் கொடுமபள்ளி பகுதியில் உள்ள கல்லூரி மாணவி சுருதிகா, சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நேஷனல் லெவல் கபடி போட்டியில், கலந்து கொண்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சிருதிகாவை ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இன்று (15-02-2025) மாவட்ட ஆட்சியர் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேலும், இதில் சம்மந்தப்பட்ட அலுவலக ஊழியர்களும் உடன் இருந்தார்கள். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
ஏலகிரி மலை நிலாவூர் கிராமத்தில் கனகநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று காமெடி நடிகர் யோகி பாபு அம்மனை வழிபட்டார். இதனைத் தொடர்ந்து நிலாவூர், அர்த்தனாவூர், ஏலகிரி மலை கிராம பொதுமக்கள் ஆகியோர் சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட அவைத்தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வேணுகோபால் அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்து முதலாம் ஆண்டு புகழஞ்சலி செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நீதிமன்றம் பகுதியில் அத்துமீறி பெட்டிக் கடைகள் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் நகராட்சியிடம் புகார் அளித்தனர். அதன்படி இன்று (பிப்.15) இரும்பு பெட்டிக் கடைகளை கிரேன்கள் மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
Sorry, no posts matched your criteria.