Tirupathur

News February 20, 2025

துத்திபட்டு ஊராட்சியில் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா துத்திப்பட்டு ஊராட்சியில்  நேற்று மாலை பல்வேறு இடங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்து அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவ சவுத்திரிவள்ளி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News February 19, 2025

எஸ்.பி.தலைமையில் குறைதீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 56 மனுக்கள் பெறப்பட்டதாகவும், மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News February 19, 2025

திருப்பத்தூரில் வேலை இல்லாதோருக்கு உதவி தொகை 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் SSLC, HSC, டிகிரி போன்ற கல்வி தகுதியின் அடிப்படையில் மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய கடைசி நாள் 28.02.2025. மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகலாம். யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 19, 2025

இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.19) திருப்பத்தூரில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர், சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 18, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News February 18, 2025

திருப்பத்தூர் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. வருகிற 21-02-2025 அன்று தனியார் துறை மூலம் வேலையில்லா மக்களுக்கு வேலை வழங்க இந்த முகாம் நடைபெற இருக்கிறது. இதற்கு கல்வித்தகுதி 8 வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த இளைஞர்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம். மாவட்ட தொழில்நெறி அலுவலகத்தை அணுகவும்

News February 18, 2025

தண்டவாளத்தில் தலை வைத்து ஒருவர் தற்கொலை

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் திம்மாம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் உடல் நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், இன்று கொடையாஞ்சி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 18, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

image

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

News February 18, 2025

தாய்மாமனை வெட்டிக் கொலை செய்த மருமகன்

image

திருப்பத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக தாய்மாமனை வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். வக்கணம்பட்டியைச் சேர்ந்த திம்மராயனின் அக்கா மகன் சக்கரவர்த்தி 3 ஏக்கர் நிலத்தை ரூ.38 லட்சத்திற்கு பைனான்சியரிடம் அடமானம் வைத்திருந்தார். திம்மராயன் பைனான்ஸியரிடம் இருந்து அந்த இடத்தை வாங்கி தனது பெயரில் மாற்றியுள்ளார். இதை அறிந்த சக்கரவர்த்தி அரிவாளால் திம்மராயனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

News February 18, 2025

திருப்பத்தூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், “இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்யுங்கள். விபத்தை தவிர்ப்போம் என ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, சட்ட மன்ற தொகுதியில் பகுதியில் உள்ள போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!