Tirupathur

News February 25, 2025

விழிப்புணர்வு குறும்படம் சமர்ப்பிக்க கால அவகாசம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் குறும்படங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 02-03-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் குறும்படம் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.

News February 24, 2025

CISFல் வேலை- கைநிறைய சம்பளம்!

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 23, 2025

ஆம்பூர் அருகே கீரை வியாபாரி விபத்தில் உயிரிழந்தார்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரிய கோமேஸ்வரம் பகுதியில் (நேற்று பிப்ரவரி 22)காலை ரெட்டி மாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாபு ராவ் மகன் ராஜேந்திரன் வயது (49)கீரை வியாபாரி நேற்று காலை சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராஜேந்திரன் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து ஆம்பூர் தாலுக

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் வேலை

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த இணையத்தில்<<>> வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

way2 நியூஸ் செய்தி எதிரொலி; போலீஸ் நடவடிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் பைக் ரேஸ் வீலிங் குறித்து நேற்று பிப். 21 Way 2 News செய்தி எதிரொலியாக மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் உத்திரவின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் சம்பந்தப்பட் தனியார் மெடிக்கல் கல்லூரிக்கு நேரில் சென்று பைக் ரேஸ் வீலிங் விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

News February 21, 2025

ஆம்பூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்.21) காலை ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கிச்சென்ற வேன் சாலை நடுவே தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது, விபத்துக்குள்ளானது. விபத்தில் வேன் ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், இதுகுறித்து, ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News February 21, 2025

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

image

திருப்பத்துார் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகேரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில், இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைகுந்மாலிக், தனஞ்சய்மாலிக் இருவரும் ரயிலில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 20, 2025

உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை

image

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறலாம் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று(பிப்.20) அறிவித்துள்ளார். உழவர் அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஓராண்டுக்குள் நடைபெற்ற திருமணம், இறப்பு, படிப்புக்கான செலவு ஆகியவற்றிக்கு விண்ணப்பிக்கலாம்.

News February 20, 2025

முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி  மண்டை உடைப்பு

image

திருப்பத்தூர் அடுத்த ஆம்பூர் தாலுகா நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்த ஜெகத்ரட்சகன் கூலி தொழிலாளியை நேற்று இரவு பெரியங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு நாச்சியார் குப்பம் வந்த போது பழைய முன்விரோதம் காரணமாக அதே பகுதியை மனேகரன், சிவா, சக்தி,சாரதி உள்ளிட்ட 5 பேர் வழிமடங்கி அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றார்.

error: Content is protected !!