Tirupathur

News March 4, 2025

ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து ஒருவர் தற்கொலை

image

நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (58), நேற்று (03.03.2025) அதே பகுதியில் உள்ள பச்சூர் – மல்லானூர் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 4, 2025

திருப்பத்துார்: நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு

image

தர்மபுரியை சேர்ந்த சூசையம்மாள் (35) என்பவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இதில் நளினி (32) என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.திருப்பத்துார் மாதேஸ்வரன் என்பவர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி மொபைலில் வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.புகாரின் அடிப்படையில் நளினி கைது.

News March 4, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று (மார்ச்.3) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சவுத்திரிவள்ளி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 4, 2025

திருப்பத்தூர் தமிழ் சங்கத்தின் செயலாளருக்கு பாராட்டு விழா

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் தமிழ் சங்கத்தின் செயலாளர் புலவர் நா.வீரப்பன் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் “தமிழ்செம்மல்” விருது பெற்றமைக்கு இன்று (மார்ச் 3) திருப்பத்தூர் மாவட்ட தமிழ் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

News March 3, 2025

தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து

image

நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இன்று மாலை வேகமாக சென்ற கார், நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரில் ஒருவருக்கு பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற நால்வருக்கும் லேசான காயம்டைந்தனர். விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 3, 2025

பிளஸ் 2 பொதுத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இருந்தனர்.

News March 3, 2025

நியாய விலை கடை பணியாளர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக 3 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக ஆங்காங்கே போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. குடோனிலிருந்து நியாய விலை கடைக்கு சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அனைத்து பொருட்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளனர்.

News March 3, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; இன்றே கடைசி நாள்

image

சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.62 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றைக்குள் (மார்.3) இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; நாளையே கடைசி

image

திருப்பத்தூரில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 62 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

image

புதிய வழித் தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது சில நிா்வாக காரணங்களுக்காக வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!