India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாகன ஓட்டிகளுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் என்றும், வாகனம் ஓட்டும் பொது மொபைல் போன் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுமாறு காவல் துறை எச்சரித்து உள்ளது.
திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பி எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் நடத்தும் பசுமை சந்தை நாளை (30-03-2025) காலை நடைபெற உள்ளது. இந்த பசுமை சந்தையில் இயற்கை முறையில் விளைந்த வேளாண்மை பொருட்கள் விவசாயிகளால் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது. இயற்கை விவசாய பொருட்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் நாளைய சந்தையை பயன்படுத்தி கொள்ளலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். <
இந்திய ராணுவத்தில் உள்ள அக்னி வீரர் பொது பணியாளர், அக்னி வீரர் தொழில் நுட்பம், அக்னிவீரர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னி வீரர் தொழிலாளி (10ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னி வீரர் தொழிலாளி (8ஆம் வகுப்பு தேர்ச்சி) விண்ணப்பதாரர்கள் 2 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏப்.10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த <
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் கோயில் கட்டுமான வேலை செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த முனிரத்தினம் (56) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கட்டிட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து நேற்று (மார்.28) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்: 2012 ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கொலை செய்த புதூர் நாடு பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு ஆயுள் தண்டனை. இன்று (மார்.28) நடந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையில் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என திருப்பத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. பாதிப்படைந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு அளித்தது.
திருப்பத்தூர், ஆண்டிப்பனுரில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் குளத்தில் வேண்டுதலை நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தை குளத்தில் போட்டால் உடனடியாக மேலே வந்தால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறுமாம். மாறாகத் தாமதமாக மேலே வந்தால் தாங்கள் வேண்டுதலும் தாமதமாகத்தான் நிறைவேறுமாம். ஒருவேளை வாழைப்பழத் துண்டுகள் மேலே வராமல் உள்ளே சென்றுவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறாது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி <
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் (26), நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, மது அருந்த என்னை ஏன் அழைக்கவில்லை என அவரது நண்பன் ராகுல் (25) கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாங்குவதால் ஏற்பட, ராகுல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமனை சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார். ரத்தகாயத்துடன் ராமன் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் ராகுலை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.