India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அதிதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு வந்து தரிசித்தால் பேச்சு குறைபாடு , ஊமைத்தன்மை, கல்வியில் ஆற்றல் குறைவு, கடன் சுமை போன்ற பிரச்சனைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பள்ளி குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கந்திலி அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று (மார்.30) வெங்கடேசன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அம்மா வீட்டிற்கு சென்றுளார் . இதனால் கோபமடைந்த வெங்கடேஷன் தனது மாமியார் மாதுவுக்கு (31-03-2025) உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார். இது குறித்து அவரது மனைவி வெங்கடேஷன் மீது கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <
AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுப்பதில் தமிழக அரசின் நிலை என்னவென்று? அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டார். இது, கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10ஆவது தற்கொலை. அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்ககுமா? அல்லது தற்கொலைகள் தொடரட்டும் என வேடிக்கை பார்க்க போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று மார்ச் இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் 30)ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.
மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <
திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த்து. இந்த கோயிலில், பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகைதோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். வியாழக்கிழமை பிரம்மோற்சவத்தின்போது, சுவாமிக்கு சாற்றப்படும் திருமண மாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் செய்வதற்கு உண்டான சூழல் ஏற்படும் என்பது ஐதீகம். நீங்களும் ஒருமுறை இங்கே சென்று வழிபட்டு பாருங்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (35), என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா (15) என்ற 10ஆம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கம்புக்குடி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு முகம் சிதைத்து கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.