Tirupathur

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் <<>>பண்ணுங்க

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10ஆவது தற்கொலை

image

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுப்பதில் தமிழக அரசின் நிலை என்னவென்று? அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டார். இது, கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10ஆவது தற்கொலை. அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்ககுமா? அல்லது தற்கொலைகள் தொடரட்டும் என வேடிக்கை பார்க்க போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 31, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று மார்ச் இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் 30)ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.

News March 30, 2025

பெங்களூரில் மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் ஏப்ரல் 16க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் <<>>செய்யுங்கள்

News March 30, 2025

திருமணத்தடை நீக்கும் திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர்

image

திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த்து. இந்த கோயிலில், பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகைதோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். வியாழக்கிழமை பிரம்மோற்சவத்தின்போது, சுவாமிக்கு சாற்றப்படும் திருமண மாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் செய்வதற்கு உண்டான சூழல் ஏற்படும் என்பது ஐதீகம். நீங்களும் ஒருமுறை இங்கே சென்று வழிபட்டு பாருங்கள்.

News March 30, 2025

சிறுமி முகத்தை சிதைத்து கொலை: ஆயுள் தண்டனை

image

திருப்பத்தூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (35), என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா (15) என்ற 10ஆம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கம்புக்குடி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு முகம் சிதைத்து கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

News March 29, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கடுமையான  எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாகன ஓட்டிகளுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் என்றும், வாகனம் ஓட்டும் பொது மொபைல் போன் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுமாறு காவல் துறை எச்சரித்து உள்ளது.

News March 29, 2025

திருப்பத்தூரில் நாளைக்கு பசுமை சந்தை.

image

திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பி எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் நடத்தும் பசுமை சந்தை நாளை (30-03-2025) காலை நடைபெற உள்ளது. இந்த பசுமை சந்தையில் இயற்கை முறையில் விளைந்த வேளாண்மை பொருட்கள் விவசாயிகளால் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது. இயற்கை விவசாய பொருட்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் நாளைய சந்தையை பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!