India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க மக்களே
திருப்பத்தூர் அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 140 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்தி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் காவல்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 18- 25 வயது வரை உள்ள பெண்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த பெண்களுக்கு நாளை (30-04-2025) திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரியில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாத ஊதியம் ரூ.16,500 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04179-222033. அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை வெளியிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்துவது கவனத்தை சிதறடிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இதனால் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. “உங்கள் உயிர் மதிப்புடையது, ஒரு மெசேஜ் அல்லது அழைப்பு உங்கள் வாழ்க்கையைவிட முக்கியமல்ல” என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 28 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர் இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 01.05.2025 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.