India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்காக விடுதி அமைக்க நேற்று (மார்.8) அடிக்கல் நாட்டபட்டது. இதில், அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார். இதில், கலெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி இவர் நேற்று தனது வாகனத்தில் நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் போது சண்டியூர் பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் ஜானகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பகுதி விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று ரயில்வே தண்டவாளத்தின் மேலே செல்லக்கூடிய மின்சார கம்பி பழுதானதால் ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய ஹவுரா விரைவு ரயில் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே துறையினர் பழுதான கம்பியை சரிசெய்தனர்.
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் யாசீர். இவர், நேற்று (மார்.8) காலை வெளியே சென்றுள்ளார். அப்போது, மனைவி ஆயிஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டிற்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிம்மணபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45) தனது மகன் பாலாஜி (25) உடன் கடந்த மார்ச் 1ஆம் தேதி பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் (மார்.6) பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் ராஜேஸ்வரி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். பரோட்டா சாப்பிட்டு தான் உயிரிழந்தாரா ? வேறு காரணமா? என நடந்து வருகிறது.
திருப்பத்தூர் பசிலி குட்டையில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி அறுபடை ஸ்ரீ முருகன் கோயில். நினைத்ததை வேண்டி பால்குடம்,காவடி எடுத்து, அழகு குத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். இங்கு வேண்டினால் கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.