Tirupathur

News April 24, 2024

திருப்பத்தூரில் 106.70 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர். இந்நிலையில் இன்று  திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.70 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்த பட்சமாக 76.82 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

திருப்பத்தூரில் தொடரும் கண்காணிப்பு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

திருப்பத்தூர்: ஆண் சடலம் கண்டெடுப்பு

image

ஆம்பூர் சான்றோர்குப்பம் அடுத்த வண்ணான்துறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நகர போலிசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 24, 2024

விடியற்காலை பொங்கல் வைத்த பொதுமக்கள்

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இன்று (ஏப்ரல்.23) சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு இன்று விடியற்காலை ஒரு மணி முதல் பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். நாட்றம்பள்ளி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 24, 2024

திருப்பத்தூர்: 104.11 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104.11 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக 77.90 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

திருப்பத்தூர்: 5 கடைகளுக்கு சீல் வைப்பு

image

ஆம்பூர் அடுத்த உமராபாத்,குட்டகத்தூர், வன்னியநாதபுரம் , மாச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

News April 22, 2024

திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு பலி

image

காட்பாடி லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று (ஏப்ரல்.21) ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 40 வயதுதக்க நபர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டனர். 

News April 21, 2024

ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

image

கோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06059 கோவையில் இருந்து ஏப்.23 ம்தேதி பகல் 11.50க்கு புறப்படுகிறது இதேபோல் வண்டி எண் 06060 பருணியில் இருந்து 26ஆம் தேதி இரவு 11.45க்கு புறப்படுகிறது. ஜூன் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும்.

News April 21, 2024

திருப்பத்தூர்: சைக்கிளில் மோதி 2 பேர் படுகாயம்

image

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையை சேர்ந்தவர் சிவ மூர்த்தி. இவர், தனது நண்பர் வெங்கடேசனுடன் பைக்கில் மண்டலவாடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிவமூர்த்தி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News April 21, 2024

திருபத்தூர்: பெண்ணை கேலி செய்த 2 பேர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமநாயக்கன் பேட்டை பகுதியில் வசிக்கும் திவாகர் சந்தீப் மற்றும் அரவிந்தன் ஆகியோர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்துள்ளனர். இதுகுறித்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் அம்பலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!