India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் டவுன் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (63), கடந்த 2022ஆம் ஆண்டு டிச., மாதத்தில் 5 வயது சிறுமியை பிஸ்கெட் தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜை கைது செய்தனர். குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை, ரூ.6,000 அபராதமும் விதித்து நீதிபதி நேற்று (மார்.11) தீர்ப்பளித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் முகமது (வயது 24). மளிகைக்கடை உரிமையாளர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசீம் முகமது நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குறும்பகேரி புதூர் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவர் கடந்த 17.12.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி சாலையில் விளையாடிக்கொண்டு இருந்த போது சிறுமியிடம் பிஸ்கட் தருவதாகக்கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தனர்.
திருப்பத்தூரில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
ஆம்பூர் தாலுக்கா வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீகன் பால் வயது (33). இவர் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பார மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜன.21 ஆம் தேதி ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 49 நாட்களாக தனிப்படை போலீஸ்காரர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று சிகான் பால் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த <
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே, அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை அருகே உள்ள கிணற்றில், ஆன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே பொதுமக்கள் கூட்டம் அங்கே அலைமோதியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நான் இருக்கின்றபோதே தென்பெண்ணை – பாலாற்றை இணைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று அமைச்சர் துரைமுருகன் நேற்று (மார்.9) வானியம்பாடியில் தெரிவித்தார். மேலும், “சாத்தனூர் அணை நிரம்பி அதைத்தாண்டி போகும் என்ற நிலை ஏற்படும் போது அந்த தண்ணீரை திருப்பி காக்கங்கரை வழியாக பாலாற்றில் விட்டால் பாலாற்றில் தண்ணீர் போகும். அந்த தண்ணீரை தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்தால் விவாய நிலங்கள் பாசன வசதி பெறும்” என்றார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.