India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று நள்ளிரவில் சென்னை – பெங்களூர் சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரதாப் (21) என்பவர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கம்பியின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.28) அதிகாலை உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் மிட்டாளம் பகுதியை சேர்ந்த மணிமேகலை (40) தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் பகுதியில் உள்ள தனது மகளை பார்க்க வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் மணிமேகலையின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை – மங்களூர் வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டது. அப்போது வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கிடைக்காததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர் இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14.54 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 75.74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும் எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெறுகிறது.
திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகரை சேர்ந்த பழனிவேல் மதுபோதையில் குடிசையில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர், பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது மரணத்தில் சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தம்பி சதீஷ்குமார் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இச்செய்தி அறிந்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் தடகளம், கபடி,கூடைபந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து என 5 போட்டிகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது. ரூ.200 கட்டணம் செலுத்தி மாணவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த அளிஞ்சிகுளம் கிராமத்தில் உள்ள ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். உடன் எம்எல்ஏ செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
வாணியம்பாடி அருகே தும்பேரி பகுதியில் சுரேஷ் என்பவர் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடை திறந்து வைத்து சிறிது நேரத்தில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தது வாணியம்பாடி தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.