India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வெளியான பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதன் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 92.34 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.82 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 94.60% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (மே.7) திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் முஃபீதே ஆம் நிதியுதவி துவக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடியில் இருந்து சுமார் 250 ஹாஜிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 17.96 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 84.92 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
ஆம்பூர் அருகே நேற்று அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று கீழ் முருங்கை பகுதியில் பலத்த காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்தது. பாலாஜி மந்திரி (72) என்பவர் இன்று காலை தனது வாழை தோட்டத்திற்கு சென்றபோது அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து தூக்கி வீசப்பட்டார். இதில், பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை அசாம் மாநில இளைஞர் பாவஞ்சித் உஜிர் நேற்று முன்தினம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வறுமையின் காரணமாக இளைஞரின் சடலத்தை எடுத்து செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே, இளைஞரின் சடலத்தை மாவட்ட நிர்வாகமே புதைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட எஸ் பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாணியம்பாடி அருகே அம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. கோடை வெயிலில் தற்போது மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூந்நிலை நிலவியது. இதனால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று மாலை 3 மணி முதல் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.