Tirupathur

News March 15, 2025

இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

10 சவரன் செயினை திருடிய மர்ம நபர்கள்

image

அம்பூர்பேட்டையைச் சேர்ந்த ஷீலா (60), தனது மருமகள் சிந்து (34) உடன் நேற்று முன்தினம் (மார்.13) இரவு ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

News March 14, 2025

OTP எண் கேட்டு வரும் அழைப்புகளை தவிர்க்கவும் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது: உங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கல்வி உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த OTP எண் தெரிவிக்குமாறு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சைபர் குற்ற உதவி 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

News March 14, 2025

மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் சார்பில், பொதுமக்களுக்கு தினமும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மார்.13) திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் அதிக நேரம் செல்போன் பயன்பாட்டில் மூழ்காதீர்கள் என்றும், அப்படி அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் பல்வேறு வகையான சைபர் குற்றங்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, விழிப்புணர்வுடன் இருங்கள்.

News March 14, 2025

ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

image

நாட்றம்பள்ளி அருகே பச்சூரில் போலி மருத்துவர் ராமச்சந்திரன் (50) நேற்று (மார்.13) கைது செய்யப்பட்டுள்ளார். கவுண்டப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பச்சூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதையறிந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் <>வழங்கப்படும்<<>>. 15ஆம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.

News March 13, 2025

பெட்ரோல் பங்க் ஊழியர் சாலை விபத்தில் பலி

image

நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், அதேப் பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று (மார்.12) இரவு வேலை முடித்து விட்டு தனது பைக்கில் வீடு திரும்பக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோர தடுப்பு மீது பைக் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 12, 2025

ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

image

ஆம்பூர் தாலுகா பணங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இனிய குமார் வயது (26). ஆட்டோ டிரைவரான இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்த வழக்கில், நேற்று  திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மீனாகுமாரி ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 12, 2025

Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

image

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <>வேலை கிடைக்கும்.<<>>

News March 12, 2025

காளை முட்டியதில் சிறுவன் பலி

image

வாணியம்பாடி அடுத்த சிமுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ப.சதிஷ் (13), கடந்த 7ஆம் தேதி அன்று பள்ளத்தூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் வேடிக்கை பார்க்க தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக காளை சிறுவனை முட்டியது. படுகாயம் அடைந்த சிறுவன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (மார்.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

error: Content is protected !!