Tirupathur

News April 27, 2024

திருப்பத்தூர்: ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் 

image

வாணியம்பாடி அடுத்த அளிஞ்சிகுளம் கிராமத்தில் உள்ள ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். உடன் எம்எல்ஏ செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்ட பலரும் இருந்தனர். 

News April 27, 2024

வாணியம்பாடியில் இளைஞர் தற்கொலை

image

வாணியம்பாடி அருகே தும்பேரி பகுதியில் சுரேஷ் என்பவர் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடை திறந்து வைத்து சிறிது நேரத்தில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தது வாணியம்பாடி தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 27, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருப்பத்தூரில் நேற்று (ஏப்.26) 106.88 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

30 வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் 

image

ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது சோலூர் ஊராட்சி புது சோலூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சாந்தகுமார் (30) அதே பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்களை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 30 வெளி மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2024

ஆம்பூர் சாலையில் போடப்பட்ட ஆஃபாயில்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு வெப்ப நிலை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் அப்பகுதி இளைஞர்கள் போடப்பட்ட ஆஃபாயில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News April 26, 2024

நாட்றம்பள்ளி: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கரி ராமன் வட்டத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் இன்று தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 26, 2024

திருப்பத்தூர் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

திருப்பத்தூரில் நேற்று (ஏப்.25) 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

திருப்பத்தூர் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

திருப்பத்தூரில் நேற்று (ஏப்.25) 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

திருப்பத்தூர்: திமுக பிரமுகர் மரணம் – எம்எல்ஏ ஆறுதல்

image

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணு. திமுக நிர்வாகியான இவர் நேற்று காலமானார். இந்நிலையில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி இன்று நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 

News April 26, 2024

திருப்பத்தூர் அருகே சோகம் 

image

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை நாயனத்தியூர் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் மணிகண்டன் (24) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மது போதையில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!