India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே.01) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) திருப்பத்தூரில் , இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த மேல்சணாங்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் சீராக வழங்கவில்லை. பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வழுதலம்பட்டு கிராமத்தில் நிலத்தகராறில் முதியவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பத் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் முதியவரின் உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட சம்பத்தை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் முறையாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று (ஏப்.30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் ஆம்பூர் காங்கிரத்தியா பகுதியை சேர்ந்த லோகேஷ் (24), பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (22), வாத்தி மனை பகுதியை சேர்ந்த முஜிபுர் அகமது (24) ஆகிய 3 கஞ்சா மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
வாணியம்பாடி அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கிரி சமுத்திரம் பகுதியில் சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புல்டோசர் எந்திரத்தின் மீது 45 பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் 8 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே திருப்பதியில் இருந்து பெங்களூரு வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ஏசி கோச் ஏர் பைப் கட்டானதால் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டது. இன்று மாலை ஆறு மணிக்கு பழுதடைந்த காரணத்தினால் ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
நாளை மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி நாளை மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.