India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்காளம் பார்பரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் லாகூர் (44). இவர் நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது திடிரென வலிப்பு நோய் ஏற்பட்டு கிழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு காற்றுடன் கூடிய கனமழை மாவட்டத்தில் அதிகப்படியான ஆம்பூரில் 43.40 மி.மீ வாணியம்பாடி 36.00 மி.மீ, நாட்றம்பள்ளி 36.00 மி.மீ, ஜோலார்பேட்டை 22.00 மி.மீ, ஆலங்காயம் 31.00 மி.மீ, திருப்பத்தூர் 18.60 மி.மீ விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் மலை தொடர்பு என்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அல்ஹுதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆதீலா நிஹால் +2 அரசு பொது தேர்தலில் 600 மதிப்பெண்களுக்கு 596 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடமும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி மின்ஹா கவுனேன் 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் படேல் முஹம்மத் யூசுப், பள்ளி முதல்வர் பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வெளியான பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதன் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 92.34 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.82 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 94.60% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (மே.7) திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் முஃபீதே ஆம் நிதியுதவி துவக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடியில் இருந்து சுமார் 250 ஹாஜிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 17.96 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 84.92 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.