Tirupathur

News August 5, 2025

திருப்பத்தூர்: 10th பாஸ் போதும் ரயில்வே வேலை ரெடி

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். செம்ம வாய்ப்பு, ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையின் அளவு வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், வாணியம்பாடி, திருப்பத்தூர், கேத்தாண்டபட்டி, ஆம்பூர் ஆகிய பகுதிகளை நேற்று மாலை பெய்த கனமழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆலங்காயம் வனப்பகுதியில் 78 மி.மீட்டர் மலையும், வாணியம்பாடி பகுதியில் 49 மி.மீட்டர் மழையும், நாட்றம்பள்ளி 15 மி.மி மழையும் பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 5, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூரில் பெற்றோர்களை இழந்து உறவினர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ரூ2000 உதவித்தொகை பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் அல்லது மக்கள் குறைதீர்வு கூட்டம், ’உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

திருப்பத்தூரில் 3 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தி ஆணை

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பலூர் காவல் நிலையம் திருப்பத்தூர் உட்கோட்டத்திற்கு ட்பட்ட ஏலகிரி மலை, குரிசிலாப்பட்டு காவல் நிலையம் ஆகிய 3 காவல் நிலையங்களும் காவல் ஆய்வாளர் நிலைக்கு தரம் உயர்த்தியும் தமிழகத்தில் 280 காவல் நிலையங்களையும் தரம் உயர்த்தி தமிழக அரசு காவல்துறை துணை செயலாளர் திராஜ் குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

News August 4, 2025

திருப்பத்தூர் மக்களே கவனமா இருங்க…

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில். ‘ பொதுமக்கள் தங்களது வாகனத்தை ஓட்டி செல்லும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நம் குடும்பம் மட்டுமின்றி மற்றவர்களின் குடும்பம் உயிரையும் பாதுகாக்க முடியும். ஷேர் IT

News July 11, 2025

BREAKING: திருப்பத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடந்த பிப்ரவரி- 2ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், அந்த பெண்ணிற்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதோடு கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட ஹேம்ராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தண்டனை விவரம் திங்களன்று வெளியாகவுள்ளது.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶திருப்பத்தூரில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶<>இந்த லிங்கில் <<>>திருப்பத்தூரில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பாலிசி குறித்து தெரிந்து கொள்ள திருப்பத்தூர் அதிகாரிகளை (04179 – 220432) தொடர்பு கொள்ளுங்கள். <<17028352>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

image

ஏலகிரி கிராமம் பொன்னகா் வட்டம் சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி பவித்ரா நேற்று (ஜூலை 10) காலை ராஜேஷ் மதுபோதையில் தனது மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து பவித்ரா ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!