Tirupathur

News March 21, 2025

திருப்பத்தூரில் நாளை புத்தகத் திருவிழா ஆரம்பம்

image

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில் நாளை(மார்.22) காலை 10 மணியளவில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். புத்தக பிரியர்களுக்கு  இச்செய்தியை பகிருங்கள்.

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன.24 வயது நிறைந்திருக்க வேண்டும்.10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <>லிங்க்<<>>.ஷேர் பண்ணுங்க மக்களே

News March 21, 2025

திருப்பத்தூர் பெயர் காரணம் தெரியுமா?

image

சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படும் திருப்பத்தூர் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை “திருப்பத்தூர்” என்று மாற்றியதாக கூறப்படுகிறது. உங்களை போல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

News March 20, 2025

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். வயது 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

அடக்கம் செய்த போலீஸ்: கணவரை தேடிவந்த மனைவி

image

ஜோலார்பேட்டை அருகே உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் உடல் அடையாளம் தெரியாததால் போலீசார் கடந்த மார்.17ஆம் தேதி அடக்கம் செய்தனர். இதற்கிடையே, அடக்கம் செய்தவரின் மனைவி கணவரை தேடி நேற்று (மார்.19) வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 10 நாட்களாக விசாரணை நடத்தி வந்தபோது, உடலை கைப்பற்ற யாரும் வராததால் போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால், அடக்கம் செய்த மறுநாளே அவரது மனைவி வந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 20, 2025

3 மாத குழந்தை மர்ம மரணம்

image

திருப்பத்தூர், அபாய் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (30) – சுகந்தி (21) தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3ஆவதாக பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் (மார்.18) காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News March 19, 2025

8th Pass போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு, தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

மதுபோதையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜூ. நேற்று (மார்ச்.18) அதிக அளவு மதுபோதையில் இருந்த இவர், தனது மனைவி காஞ்சானவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த காஞ்சானவை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காஞ்சனாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர் ராஜூவை கைது செய்தனர்.

News March 19, 2025

திருப்பத்தூர் அருகே குளு குளு பகுதி

image

திருப்பத்தூர் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலமான ஏலகிரி, ஆண்டு முழுவதும் இதமான வானிலையை வழங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஏலகிரியில், ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் செல்லலாம். அது மட்டுமின்றி ஏலகிரி ஏரியில் போட்டிங் செய்துவிட்டு, இயற்கை பூங்கா, அட்வென்ச்சர் பார்க், முருகன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் ஆகியவற்றையும் பார்வையிடலாம்.

News March 18, 2025

31.03.2025 க்குள் வரிகளை செலுத்த ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 208 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் 2024-25 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், வர்த்தக உரிமம் மற்றும் தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் 31.03.2025-க்குள் செலுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!