India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்களை வருகின்ற 16/4/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944244350 மற்றும் https://tiruppathur.nic.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். குறைவான விலையில் வாகனம் வாங்க இது நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.
சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஏலகிரி மலையின் பள்ளத்தாக்குகள் வழியாக ஓடும் அட்டாறு நதியில் உருவாகி 15 அடி உயரத்தில் இருந்து விழும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, பல்வேறு மூலிகை செடிகளை கடந்து செல்வதால் நோய் தீர்க்கும் குணம் படைத்ததாக சொல்லப்படுகிறது. இங்கு செல்ல ஒரு ட்ரெக்கிங் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ட்ரெக்கிங் முடிச்சு குளிக்கும் அனுபவம் சுவாரசியமாக இருக்கும். இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஒரு குளியல் போட்டுட்டு வாங்க. ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 07.04.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருடன் தொலைபேசி எண் மற்றும் அவர்களின் பெயரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதனை மேல உள்ள படத்தில் காணலாம்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொது மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பின்னர் முறையாக Log Out செய்து வெளியே வரவும். இல்லையெனில் தரவுகள் திருடப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்.15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 04179-222033 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு, மிஸ் பண்ணிராதீங்க. ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து தொழிற்சாலைகளிலும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், மே 15 ஆம் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் முழுவதும் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஏப்ரல்.07) அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 20 அங்கன்வாடி பணியிடங்கள், குறு அங்கன்வாடி பணியிடங்கள், 15 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் <
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளி காவலாளி இர்பான் என்பவரை இன்று (07.04.2025) காலை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை கொலையாளிகள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த டெல்லிபாபு (62), நேற்று (ஏப்ரல் 6) மதியம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பழனி (62) என்பவருடன் ஆம்பூருக்கு பைக்கில் புறப்பட்டார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் டெல்லிபாபு சம்பவ இடத்திலும், பழனி மருத்துவமனையிலும் இறந்தனர்.
Sorry, no posts matched your criteria.