Tirupathur

News August 9, 2025

அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் சுதந்திர தினமான 15.08.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி உத்திரவு பிறப்பித்துள்ளார்.

News August 9, 2025

திருப்பத்தூர்: தேவையற்றை மெஸேஜ் வருகிறதா?

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும், பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் வரும் செய்திகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவலர்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் 1930 என்ற இந்த எண்ணிற்கோ அல்லது இந்த <>இணைதளம்<<>> வாயிலாகவோ புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் 95.60 மில்லிமீட்டர் மழை பொழிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று (ஆக.08) கனமழை பெய்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 24.20 மில்லி மீட்டர் மழையும், வாணியம்பாடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் மொத்தம் 95.60மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மேலும் மழையால், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று (ஆக .09) காலை 10 மணியளவில் திருப்பத்தூர்- குரும்பர் தெரு, உடைய முத்தூர், நாட்றம்பள்ளி- கோனாபட்டு, வாணியம்பாடி- கிருஷ்ணாபுரம், ஆம்பூர்- பச்சகுப்பம் ஆகிய நியாய விலை கடைகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

BREAKING: திருப்பத்தூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) கனமழை காரணமாக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விடுமுறை என்பதை தெரியப்படுத்துங்கள்.

News August 9, 2025

திருப்பத்தூரில் இன்று கனமழை வெளுக்கும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.

News August 8, 2025

காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்து

image

வாணியம்பாடி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 270 அடி நீள காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

News August 8, 2025

என்ன சான்றுகளை பெறலாம்?

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

திருப்பத்தூர் மக்கள் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17340554>>தொடர்ச்சி<<>>

News August 8, 2025

திருப்பத்தூர் மாவட்ட போலீசார் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (ஆக 8) தனது சமூக வலைத்தளம் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டிள்ளது. அதில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணையதளத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின் பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!