India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் சிங்காரப்பேட்டை சாலை முதல் தோரணபதி சாலை வரை இருந்த தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.மேம்பாலத்தை நேற்று ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் தர்ப்பகராஜை சந்தித்த அப்பகுதி மக்கள் இந்த சாலையை கடப்பதில் சிரமப்பட்டதாகவும், மேலும் மாணவர்கள் 5 கிலோமீட்டர் வரை சுற்றி வர வேண்டியிருந்தது.மேம்பாலத்தால் அந்த கவலை நீங்கியது என மக்கள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்
திருப்பத்தூரில் சுமார் 10 கி.மீ தொலைவில் ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டுகிறது ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி. அப்பகுதியில் உள்ள பல்வேறு மூலிகை தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் குளிப்பது பல்வேறு நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உண்டு. மேலும் அருவி அருகே முருகன் கோயில் உள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், போலி முகவர்கள் தங்கள் மொபைல் எண்ணிற்கு வாழ்த்துக்கள், உங்களுக்கு வேலை கிடைத்து விட்டது. அதற்காக முன் பணம் 50000 செலுத்தினால் போதும் என தகவல் அனுப்பி உங்களுடைய பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே பணத்தை முதலீடு செய்வதற்கு முன் நன்கு யோசித்து செயல்பட மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு வரைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற www.tcp.org.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 01.08.2024 முதல் 31.01.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு சாலை விபத்துகள் ஏற்படும்போது படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக உதவி செய்து, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவி செய்யும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழும் ரூபாய் ஐந்தாயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து தமிழக அரசின் சார்பில் நாளை வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு நிர்மலா தலைமை ஆசிரியை சின்னூர், மாதையன் பட்டதாரி ஆசிரியர் களர்பதி, கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் தோரணம்பதி மற்றும் தேவராஜ் பட்டதாரி ஆசிரியர் கணிதம் அரசு நடுநிலைப்பள்ளி வெள்ளநாயக்கனேரி ஆகியோர் பள்ளி கல்வித்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. அந்த விருதுக்கு திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 4 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜெயபுரம் தாவரவியல் ஆசிரியர் சத்தியமூர்த்தி, அண்ணாண்டப்பட்டி தலைமை ஆசிரியர் செல்வ சேகரன், அரசு மேல்நிலைப் பள்ளி ஜோலார்பேட்டை வரலாறு ஆசிரியர் கேசவன் மற்றும் மூக்கனூர் தலைமை ஆசிரியை பேபி ஆகியோர் பெறவுள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் கவிதா(40) கூலி தொழிலாளி. இவர் வாணியம்பாடி ஸ்டேட் பேங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணம் எடுக்க சென்றபோது ரூ.13,22,692 வரி பாக்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவருடைய பான்கார்டு, ஆதார், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் மோசடி அரேங்கேறியுள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 SI (சார்பு ஆய்வாளர்கள்) 2 SSI (சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்) மற்றும் 11 காவலர்கள் என மொத்தம் 15 பேரை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மதுபானங்கள் மீது கூடுதல் ரூ.10 விலை வைத்து விற்பனை செய்த கடைகளில் பறக்கும் படை குழு நடவடிக்கை விற்பனையாளர்கள் மதுபான கடை எண். 11056-ல் அனந்தநாராயணன் , 11058 மாயகேசவன் , 11285- சீனிவாசன், 11324-ல் கோவிந்தராஜி, 11326-ல் இளங்கோ மற்றும் 11374ல் விநாயகம் ஆகியோர்களை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.