Tirupathur

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

எருது விடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரஞ்சித்குமார் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (மார்.31) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2025

கல்வியில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய கோவில்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அதிதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு வந்து தரிசித்தால் பேச்சு குறைபாடு , ஊமைத்தன்மை, கல்வியில் ஆற்றல் குறைவு, கடன் சுமை போன்ற பிரச்சனைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பள்ளி குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 31, 2025

கணவன் மனைவி சண்டை- மாமியாருக்கு அஞ்சலி போஸ்டர் 

image

கந்திலி அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று (மார்.30) வெங்கடேசன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அம்மா வீட்டிற்கு சென்றுளார் . இதனால் கோபமடைந்த வெங்கடேஷன் தனது மாமியார் மாதுவுக்கு (31-03-2025) உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார். இது குறித்து அவரது மனைவி வெங்கடேஷன் மீது கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் <<>>பண்ணுங்க

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10ஆவது தற்கொலை

image

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுப்பதில் தமிழக அரசின் நிலை என்னவென்று? அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டார். இது, கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10ஆவது தற்கொலை. அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்ககுமா? அல்லது தற்கொலைகள் தொடரட்டும் என வேடிக்கை பார்க்க போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 31, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று மார்ச் இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் 30)ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.

News March 30, 2025

பெங்களூரில் மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் ஏப்ரல் 16க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!