Tirunelveli

News January 9, 2025

ஆளுநரின் சகோதரர் மறைவு; நெல்லை எம்எல்ஏ அஞ்சலி

image

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலன் இன்று உயிரிழந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவரது இல்லத்துக்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். இதில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

பாளையங்கோட்டையி அகில இந்திய பெண்கள் கபாடி தொடர்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சொசைட்டி மைதானத்தில் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள இந்த அகில இந்த போட்டியில் பல்வேறு மாநில வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். பார்வையாளர்கள் அமரும் கேலரி வசதியுடன் நடைபெறும் இந்த போட்டிக்கான ஏற்பாடு முழுவீச்சில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது 

image

நெல்லை ஆட்சியர் அலுவகத்திற்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த பேட்டையை சேர்ந்த அப்துல்ரகுமான்  என்பவரை போலீசார் கைது செய்தனர். பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்காததால் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

News January 9, 2025

திருப்பதியில் உயிரிழந்தவர்களுக்கு நெல்லை முபாரக் இரங்கல்

image

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

News January 9, 2025

இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு 

image

பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை காலை 4.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரைஸ்ரீ அனந்த ஸயன சேவை நடைபெறும். பின்னர் மாலையில் ஸ்ரீ இராஜ கோபாலன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கன ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News January 9, 2025

ஆதாய கொலை 83% குறைவு; டிஐஜி தகவல்

image

நெல்லை காவல் சரகத்தில் சாதிய கொலைகள், ரவுடி கொலைகள், வரதட்சணை மரணங்கள் எதுவும் 2024ல் நடைபெறவில்லை. இங்கு 83 சதவீதம் ஆதாய கொலைகள் 2024 ஆம் ஆண்டு குறைந்துள்ளது. சரகத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள 268 கல்லூரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என நெல்லை காவல் சரக துணைத் தலைவர் மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்

image

ரயில் பயணிகள் கவனத்திற்கு பராமரிப்பு பணிகள் காரணமாக
இன்று ( ஜன.9 ) வியாழன் & சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் நெல்லை வழியாக செல்லும் ரயில் வண்டி எண்: 16321 / 16322,
கோயம்புத்தூர் – நாகர்கோவில்
நாகர்கோவில் – கோயம்புத்தூர் 2
மார்க்கத்திலும் கரூர் – விருதுநகர்
இடையே மாற்று பாதையில் இயக்க படுகிறது.
கரூர் – திருச்சி – காரைக்குடி- மானாமதுரை – விருதுநகர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. *ஷேர்

News January 9, 2025

விமான படையில் சேர மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு 

image

2025 ஆம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான அக்னி வீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆட்சேர்ப்பு கொச்சியில் உள்ள 14வது ஏர் மேன் தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வரும் 29ஆம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள நெல்லை வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

நெல்லை மாவட்டத்தில் இன்றைய நிகழ்ச்சி

image

1.இன்று காலை 9.15 மணிக்கு மகாராஜாநகர் அரசு அலுவலர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார்கள்.  2. நெல்லை சரக டிஐஜி மூர்த்தி காலை 10 மணியளவில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். 

News January 9, 2025

நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

image

பேட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் செய்யது அப்துல் ரகுமான். இவர் இன்று (ஜன.09) காலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். பின்னர் போனை துண்டிப்பு செய்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!