Tirunelveli

News August 10, 2025

நெல்லை மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஆக.09) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News August 9, 2025

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் – 3 பேர் கைது

image

நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மேல அரியகுளத்தில் சுடலையாண்டி(72), சேர்மவேல்(60), ராமசுப்பிரமணியன்(25) ஆகியோரது பட்டறையை சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகவலை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

நெல்லை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை

image

நெல்லை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர், மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 45 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை சம்பளம். தகுதியான நபர்கள் 11.08.2025 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை *SHARE* பண்ணுங்க.

News August 9, 2025

ராதாபுரம் இளைஞர் கொலை – குற்றாவளிகள் வாக்குமூலம்

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் கோயம்புத்தூரில் வேலை செய்த போது, எங்களது உறவினர் பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கடந்த 6ம் தேதி பிரபுதாஸை பின் தொடர்ந்தோம் தொடர்ந்து பைக்கில் சென்ற போது அவரை வழிமறித்துக் கொலை செய்தோம் என கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

News August 9, 2025

சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சுதந்திர தின கொண்டாட்டம் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக திருநெல்வேலி வழியாக செங்கோட்டை சென்னைக்கு சிறப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் நாகர்கோயிலில் இருந்து நெல்லை வழியாக வருகிற 17-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் என தெரிவிக்கபட்டுள்ளது. வள்ளியூருக்கு இரவு 11:25 மணிக்கு வரும்.

News August 9, 2025

நெல்லை: வாகனங்கள் FINE-ஐ நினைச்சு இனி NO FEEL!

image

நெல்லை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 9, 2025

நெல்லை பெண்களே NOTE பண்ணிக்கோங்க!

image

நெல்லை மாவட்ட பெண்களே! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…

➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098

➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181

➟காவல் ஆம்புலன்ஸ்: 112

➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம நெல்லை மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த எண்ணை SAVE பண்ண SHARE பண்ணுங்க!

News August 8, 2025

இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்றிரவு (ஆகஸ்ட் 8) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.

News August 8, 2025

நெல்லை போலீசார் சாதனை – கமிஷனர் பாராட்டு

image

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.07.2025 முதல் 26.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் பதக்கங்களை வெற்று சாதனை படைத்தனர். அவர்களை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதி மணி இன்று (ஆகஸ்ட் 8) நேரில் அழைத்து பாராட்டினார். போலீஸ் துணை கமிஷனர்கள் உடன் இருந்தனர்.

News August 8, 2025

நெல்லை இளைஞர்களே அரசு வேலை – ரூ.68,000 வரை சம்பளம்!

image

நெல்லை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <>இங்கே க்ளிக்<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!