India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளை சாந்தி நகர் பெல் காலனியைச் சேர்ந்த செல்வம் சுந்தர் ராவ் வ.உ.சி மைதானம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் ஊழியர்கள் வந்து போது கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பாளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 20 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளன. எனவே விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பலன் அடையலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோடகநல்லூர் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக BNS 271,272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர நடுக்கல்லூர் காட்டுப்பகுதியில் நேற்று கேரளா மாநிலத்தின் மருந்து கழிவுகளை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கண்டனத்தை தெரிவித்து, இனியும் இதேபோன்று நிகழ்வு தொடர்ந்தால் குப்பைகளோடு கேரளா செல்வேன் என தெரிவித்துள்ளார்.
நெல்லை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள நடுக்கல்லூர் காட்டுப்பகுதியில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை இன்று(டிச.17) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி ஊரக பஞ்சாயத்து உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் Facebook இல் அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை ஏற்கும் முன் யோசித்து செயல்படுங்கள். மேலும் ஜாக்கிரதையாக ஆன்லைன் நட்பை உருவாக்குங்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் துபாய் கடலில் மீன் பிடித்த போது பக்ரைன் கடற்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் வேண்டுகோள் இணங்க அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நாளை இரவு அவர்கள் நாடு திரும்புவார்கள் என எம்பி ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகர் பாளையங்கோட்டை தியாகராஜ நகர் துணை மின்நிலையத்தில் நாளை(டிச.17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தியாகராஜ நகர், மகாராஜா நகர், ராஜகோபாலபுரம், தாமிரபதி காலணி, ஏ ஆர் லயன், ராஜேந்திரன் நகர் ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்: காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. மாஞ்சோலையில் இன்று(டிச.16) காலை 9 மணி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. பாப்பாக்குடி சுப்பிரமணியபுரத்தில் பகல் 11:30 மணி முதல் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.
நெல்லையில் கடந்த 3 நாட்கள் கனமழைக்கு பிறகு, இன்று(டிச.16) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் சில முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. அதில், பள்ளிகளில் மழைநீர் தேக்கம் குறித்த ஆய்வு பிறகே பள்ளியை தொடங்க வேண்டும், தண்ணீர் தேங்கி இருந்தால் முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கலாம், மழைநீர் தேக்கம் இருந்தால் தலைமையாசிரியர் விடுமுறை அறிவிக்கலாம் என ஆட்சியர் உத்தரவு
Sorry, no posts matched your criteria.