Tirunelveli

News April 18, 2025

ரூ.50,000 சம்பளத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

image

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 18, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

image

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.

News April 18, 2025

ஜாகிர் உசேன் கொலை; 4 பேர் மீது குண்டாஸ்

image

நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News April 17, 2025

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வழக்கு விசாரணை இன்று (ஏப்.17) நடைபெற்றது. இதில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டார். காலையில் தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. 

News April 17, 2025

நெல்லை: கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் மேளா அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தலைமையகம் மற்றும் 17 கிளைகளில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடன் மேளா நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி கொக்கரகுளம் ரோஸ் மஹாலில், 22 ஆம் தேதி வள்ளியூர் எம் எஸ் மகாலில், 24 ஆம் தேதி அம்பை அரோமா பள்ளியில் நடக்கிறது.

News April 17, 2025

கன்னியாகுமரி – சென்னை சிறப்பு ரயில்

image

விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்(06089) சென்னையிலிருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில்(06090) 18ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு அதற்கு மறுநாள் காலை சென்னை வந்தடையும்

News April 17, 2025

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுற்று நீதிமன்றம்

image

நெல்லை ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மாற்றுத்திறனாளிகளுக்காக மே 29,30 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை ஏப்.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94999 33236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்

News April 17, 2025

மாவட்ட அளவிலான நிகழ்ச்சிக்கு அழைப்பு

image

திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் (ஏப்ரல் 16) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News April 17, 2025

நெல்லை மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462–2501035, காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, இரயில்வே உதவி – 1512, கடலோர காவல் உதவி – 1093 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.

error: Content is protected !!