Tirunelveli

News November 1, 2025

நெல்லை: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்! APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 1, 2025

நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

அம்பாசமுத்திரம் புறவழிச் சாலையை இன்று பகல் 10:30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார். பிசான பருவ சாகுபடிக்காக இன்று பகல் 11 மணிக்கு பாவநாசம் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.
மணிமுத்தாறு தூங்கப் போதையில் சுற்றுச்சூழல் மற்றும் சாகச சுற்றுலா அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை நிகழ்வு இன்று பகல் 12 மணிக்கு நடக்கிறது.

News November 1, 2025

நெல்லை: பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

image

நெல்லை ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்தவர் முத்தரசி 43. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் கணவர் பாலகணேஷ் கடந்தாண்டு இறந்தார். மகள்களுடன் முத்தரசி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். சில நாட்களாக முத்தரசி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சாந்தி கடைக்கு சென்ற நேரத்தில் முத்தரசி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 1, 2025

பாபநாசம் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

image

நெல்லை மாவட்டம் பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சுகுமார் தலைமையில் தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைக்க உள்ளார். இதைப்போல் 11.50 மணிக்கு மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

News November 1, 2025

நெல்லையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தாயுமாணவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இல்லம் தேடி வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற நவ. 3, 4ம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பன்னுங்க.

News November 1, 2025

போலி வங்கி கணக்கு மோசடி; இளைஞர் கைது – நெல்லை எஸ்.பி

image

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரில் ஆன்லைனில் முதலீடு செய்து போலியான வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்த ஆசையை தூண்டி மோசடி செய்து ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், கிட்டங்காயத்தை சேர்ந்த 27 வயதான ராசித் என்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது.

News October 31, 2025

திருநெல்வேலி முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பயிற்சி

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு விரைவில் களப்பணி தொடங்கும்.

News October 31, 2025

BREAKING நெல்லை: மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

image

நரசிங்கநல்லூர் பகுதியில் குடும்பத்தகராறில் இன்று மாமியார் வள்ளியம்மாளை(45) மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ளார். மோதல் சம்பவத்தை தடுக்கச் சென்ற வள்ளியம்மாளின் மகள் துர்காவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தாய், மகள் இருவரையும் வெட்டிய துர்காவின் கணவர் ஆறுமுக நயனாரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News October 31, 2025

பாரதியார் பிறந்தநாள் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பே.ரா.விடுத்துள்ள செய்தி குறிப்பு: பொதிகை தமிழ் சங்கம் சார்பில் மாநில அளவிலான பாரதியார் பிறந்தநாள் கவிதை போட்டிகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கவிதைகளை 36 வரிகளுக்குள் எழுதி வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் pothigaitamilsangam@gmail.com என்ற இணையதளத்தில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

News October 31, 2025

நெல்லை: நவம்பர் மாதம் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் படி நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 65 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரருக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறத. நவம்பர் மாதத்திற்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி வருகிற 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும். இதை தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!