India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 139 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
நெல்லையிலிருந்து நாளை இரவு 10.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06161), அதிகாலை 2 மணிக்கு தில்லி சென்றடையும். இதில் படுக்கை வசதியுள்ள 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடூர், டெல்லி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். *ஷேர் பண்ணுங்க
நாங்குநேரியில் ஜாதி வன்மத்தால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றது. மர்ம நபர்கள் இன்ஸ்டாகிராமில் பழகி அவரை கொக்கிரகுளம் வசந்தம் நகர் பகுதிக்கு வரவழைத்து தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பாளையங்கோட்டை போலீசார் இன்று சங்கரநாராயணன் சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாகவும் மேலும் இருவரை தேடி வருவதாகவும் மாநகர காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.
முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
▶️மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
▶️களக்காடு முண்டந்துறை சரணாலயம்
▶️பாபநாசம் அகஸ்தியர் அருவி
▶️மாஞ்சோலை
▶️நெல்லை வனவிலங்கு சரணாலயம்
▶️காரையார் அணை
▶️நெல்லையப்பர் கோயில்
▶️பனதீர்த்தம் அருவி
திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <
மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எட்டான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்(24), முத்து(20), சுடலைமுத்து(18), அந்தோணி ராஜ் (23) ஆகிய 4 பேரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர்.
தமிழகவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் வரும் 23ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும். இந்த முகாமில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து ஜிம்னாஸ்டிக் குத்துச்சண்டை ஆகியவை, 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறந்த அரசு பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர்வதற்கு அண்ணா விளையாட்டு அரங்கில் பதிவு செய்ய வேண்டும்.
நாசரேத் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் கென்னடி (48 ). இவர் தனது ஆட்டோவை சர்வீஸ் செய்வதற்காக உவரி நவ்வலடி சாலை மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது வேகத்தடையில் ஆட்டோ இறங்கியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அரங்கில் நேற்று ஏப்ரல் 18 நடைபெற்ற மாபெரும் மரக்கன்று நடும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசரும் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு உறுப்பினருமான தண்டபாணி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினர். அப்போது அவர், “பொதுமக்கள் எந்த நேரமும் சட்டப்பணிகள் ஆணையக் குழுவை அணுகலாம். உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். சட்ட ரீதியான உதவிகள் செய்ய ஆணைக் குழு தயாரக உள்ளது” என்றார்.
Sorry, no posts matched your criteria.