Tirunelveli

News January 20, 2025

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 

image

நெல்லை ஸ்ரீபுரத்தில் தேசிய தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 23ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். அதோடு இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

நெல்லை அருகே 823 ஆண்டு முந்தைய நகரம் கண்டுபிடிப்பு

image

கொண்டாநகரம் கிராமத்தில் உள்ள சிவன்கோவிலில் கல்வெட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகள் கோவிலில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அதில் இந்த ஊரை மையமாகக் கொண்டு 823 ஆண்டுகளுக்கு முன்பு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் ஒரு நகரம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை அவர்கள் நேற்று (ஜன.19) தெரிவித்தனர்.

News January 20, 2025

சிறிய குற்றச் செயலில் ஈடுபட்டால் கூட NOC கிடையாது – எஸ்பி

image

ஏர்வாடியில் காவல்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நாங்குநேரி வட்டார மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு திருவிழா நேற்று (ஜன.19) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட எஸ்பி, சிறிய குற்றச் செயலில் ஈடுபட்டு வழக்கு பதிந்திருந்தால் கூட வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்கும், அரசு வேலையில் சேர்வதற்கும் NOC வழங்கப்படாது என தெரிவித்தார்.

News January 20, 2025

பாளையங்கோட்டையில் இரட்டை கொலை – பயங்கரம்

image

ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர்-செல்வராணி தம்பதியின் மகள் ஜெனிபரை அதே ப​குதியைச் சேர்ந்த மரியகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஜெனிபர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.ஜெனிபர் வேறு ஒருவரை காதலித்து வந்ததாக சந்தேகப்பட்ட மரியகுமார் ஜெனிபரின் வீட்டிற்கு சென்று மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

News January 20, 2025

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 3 பேர் கைது

image

பாளையங்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ரஞ்சன் (42). இவர் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த மாதம் பீரோவில் இருந்து 1.50 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் மாயமாகியது. போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் வீட்டில் பணி புரிந்த அண்ணா நகரை சேர்ந்த சுஜிதா, கோட்டூரை சேர்ந்த ஆயிஷா, பீர் ஆகிய 3 பேரை கைது செய்து நேற்று (ஜன.19) சிறையில் அடைத்தனர்.

News January 19, 2025

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று (ஜன.19) கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

பாஜக புதிய மாவட்ட தலைவர் தேர்வு

image

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பலர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்துப் பலவேசம் என்பவர் நெல்லை வடக்கு மாவட்டத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

News January 19, 2025

நெல்லையில் அதிகபட்சமாக 151 மி.மீ மழை

image

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் கல்லிடைக்குறிச்சி அருகே மாஞ்சோலை ஊத்து பகுதியில் 151 மில்லி மீட்டர் மழையும், நாலுமுக்கு பகுதியில் 137 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 106 மில்லி மீட்டர் மழையும்,  காக்காச்சியில் 120 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News January 19, 2025

சாலை விபத்து பலி எண்ணிக்கை 16% குறைந்துள்ளது: எஸ்பி

image

நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நேற்று(ஜன.18) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024ம் ஆண்டு மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது 3,481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் பலி எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 19, 2025

திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டுக்கு தடை; நெல்லை முபாரக் கண்டனம்

image

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜன.18) வெளியிட்ட அறிக்கையில், 400 ஆண்டுகள் பழமையான திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வழிபாட்டுக்கு தமிழக அரசு தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்துள்ள ஸ்டாலின் அரசு இந்த விவகாரத்தில் சிறுபான்மை மக்களின் உரிமையை பறிப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

error: Content is protected !!