Tirunelveli

News February 19, 2025

அறிவியல் மையத்தில் போட்டிகள்

image

கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தின் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன அதன்படி 23, 24 ,25ஆகிய தேதிகளில் காலை 10.30மணிக்கு மாணவ மாணவிகளுக்கான அறிவில் வினாடி வினாடி, ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் sciencecentrenellaiednprog@gmailcom என்றமின்னஞ்சலில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

News February 19, 2025

மினி பேருந்துகள் இயக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

சந்திப்பு அண்ணாசிலை- பிரசன்னா காலனி வரை, பெருமாள்புரம்-பிரசன்னா காலனி, ஐஆர்டி பாலிடெக்னிக் விலக்கு -அரவிந்த் கண்மருத்துவமனை, சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன்-தாமஸ்நகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. தகுதியானவர்கள் மினிபஸ்களை இயக்குவதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News February 19, 2025

சேரன்மகாதேவியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

image

கன்னியாகுமரியை சேர்ந்தவர் பிபின் (28). இவர் நெல்லை சேரன்மகாதேவி அருகே புலவன்குடியிருப்பு பகுதியில் தனியார் செங்கல் சூளையில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று பணியின் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

News February 18, 2025

நெல்லையில் வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாதந்தோறும் 3 ஆம் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. நடப்பு மாதம் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு பாளை பெருமாள்புரம், சி.காலனி, சிதம்பரநகர் என்ற புதிய முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

News February 18, 2025

ரயில்களில் பொது பெட்டி எண்ணிக்கை மீண்டும் குறைப்பு

image

தெற்கு ரயில்வே முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களிலும் நான்கு முன் பதிவற்ற பெட்டிகள் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி நெல்லை வழியாக செல்லும் கன்னியாகுமரி – புதுச்சேரி எர்ணாகுளம் -வேளாங்கண்ணி ரயில்களில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்டதாகவும், இது தற்காலிகமானது என நேற்று தெரிவிக்கப்பட்டது.

News February 18, 2025

காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய கைதி மீட்பு

image

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மீனவர் காலனியை சேர்ந்த பெயிண்டர் ராஜா என்பவரை அடிதடி பிரச்சினைக்காக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையத்திலிருந்து அவர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அவரை மீண்டும் கைது செய்தனர்.

News February 18, 2025

உரிமை பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வலியுறுத்தல்

image

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் எம்சியூ 5 உள்ளிட்ட ரகங்களும் தனியார் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன .இந்த வகை பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 475 கிராம் பொட்டலம் ரூ.864 விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

News February 18, 2025

தபால் நிலையங்களில் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை தற்போது நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News February 17, 2025

தாதுமணல் கொள்ளை – ₹5,832 கோடி வசூலிக்க உத்தரவு

image

நெல்லை உட்பட தென் கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறி தாதுமணல் அள்ளிய புகார்களை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட 5,832 கோடி அபராதமும் செல்லும். இதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்தும் விசாரித்து, பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை அரசிடம் ஒப்படைக்கவும்,தாது மணல் நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரி துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவு

News February 17, 2025

வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நான்கு சக்கர வாகனத்திற்கு நம்பர் பதிவு செய்வதற்கு ரூ.20,000 லஞ்சம் கேட்டதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. இதனை அடுத்து ரூ.10000 லஞ்சத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெற்ற நிலையில் அவர் மீது இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!