Tirunelveli

News November 3, 2025

நெல்லை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<>கு க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 3, 2025

நெல்லை: முன்னாள் எஸ்.ஐ மகனுக்கு கொலை மிரட்டல்!

image

நெல்லை டவுனை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி, வக்பு நிலப்பிரச்சினையில் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யபட்டார். பிஜிலியின் மகன் இஜூர் ரகுமான் பிஜிலிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது மகனுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலம் குறித்து முறையான விசாரணை நடத்தி, முதல்வர் நியாயம் வழங்க கோரியுள்ளார். இதுக்குறித்து டவுன் போலீசார் விசாரணை.

News November 3, 2025

நெல்லை:நாளை நவ.04 மின்தடை

image

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் நாளை (04.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகர்ப்புறம் உள்ள அனைத்து பகுதிகள், கல்லிடைக்குறிச்சி கோட்டம்: ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை. வள்ளியூர் கோட்டம் பகுதிகளில் மின்தடை இருக்கும். SHARE!

News November 3, 2025

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (நவ.2) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News November 2, 2025

நெல்லை: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே; ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News November 2, 2025

நெல்லை – மந்திராலயம் சிறப்பு சுற்றுலா ரயில் அறிவிப்பு

image

நெல்லையிலிருந்து நவ.9 அன்று நாசிக், சீரடி, சிங்கனாப்பூர், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு “பாரத் கௌரவ்” சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் செல்பவர்கள் சுற்றுலா தலங்களை பார்வையிட தனி போக்குவரத்து வசதி, தென்னிந்திய உணவு, பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும். தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது என பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 2, 2025

நெல்லையில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆத்துகுறிச்சி கிராமத்தில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மரிய புஷ்பம் என்ற மூதாட்டி மீது வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 2, 2025

களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி

image

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் தலையணை உள்ளது.
கடந்த வாரம் வரை நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் தலையணையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ( நவ.1) முதல் தடை விளக்கப்பட்டு பயணிகள் தலையணையில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

News November 2, 2025

நெல்லையில் போலீசார் அதிரடி இடமாற்றம்

image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் டிஎஸ்பி சதீஷ்குமார் தர்மபுரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் நெல்லை மாநகர நுண்ணறிவு போலீஸ் உதவி கமிஷனர் கதிர்லால் சிவில் சப்ளை சிஐடி பிரிவு மயிலாடுதுறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

error: Content is protected !!