India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!
மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுலா பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனடிப்படையில், களக்காடு தலையணை சுற்றுலா பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், தட்டுகள், கோப்பைகள், ஸ்ட்ராக்கள், , பிளாஸ்டிக் குச்சிகள் ,பிளாஸ்டிக் தேநீர் கப் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இத்தகைய பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என வனத்துறை கேட்டு கொண்டுள்ளது
திருக்குறுங்குடி அருகே மாவடியைச் சேர்ந்த வெண்ணிலா தனது தங்க நகைகளை தாயார் ருக்குமணியிடம் ஒப்படைத்திருந்தார். ருக்குமணி கடந்த 18-ம் தேதி மும்பையில் இருந்து ஊருக்கு வந்த போது வெண்ணிலா நகைகளை தருமாறு கேட்டுள்ளார். ருக்குமணி பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் சிலவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்குமணி மன வேதனை அடைந்து வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாளை பெருமாள்புரத்தில் உள்ள நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப் பயிற்சி வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. தகுதியானவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும் 95003 24417, 95005 24417 ஆகிய சிறப்பு எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார். *மாணவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*
திருநெல்வேலியில் செயல்படும் தனியார் சோலார் நிறுவனத்தில் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலை அறிவியல்(BSC) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாத ஊதியமாக 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
நெல்லை கேடிசி நகரை சேர்ந்தவர் ஜெப்ரின் சாமுவேல் (22). இவர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் டக்கரம்மாள்புரம் அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெல்டிங் கட்டுமானப்பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 வரை வழங்கப்படுகிறது. ITI படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-21, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகளான டானிக் பாட்டில்கள் போன்றவை பொதுக் கழிவுகளுடன் சேர்ந்து எரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து நேற்று மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் குப்பைகளை முறையாக கையாள வேண்டும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.
Sorry, no posts matched your criteria.