India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

திருநெல்வேலி மாநகர எல்லை பகுதியில் இன்று நள்ளிரவு 12 முதல் வருகிற 18ஆம் தேதி வரை 15 தினங்களுக்கு போலீஸ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், தர்ணா, கூட்டங்கள், போராட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை அமலில் இருக்கும் என மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகர பெருமாள்புரம் டாஸ்மார்க் பாரில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோழி கடையில் வைத்து நேற்று இரவு மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர்களான பாலகிருஷ்ணன் என்பவரை அவரது நண்பரான செல்வம் என்பவர் கொலை செய்துள்ளார். இதனை அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் 15 நிமிடங்களில் குற்றவாளியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.3) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவம்பர் 3) நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இவ்வாறு இந்த நிமோனியா காய்ச்சலால் மூன்று வயது சிறுமியின் உயிரிழப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

ஆட்சியர் சுகுமார் இன்று அளித்த பேட்டியில், வாக்கு சாவடி அதிகாரிகள் சிறப்பு திருத்தபட்டியல் சரிபார்ப்பு பணியின் போது அரசியல் கட்சி முகவர்கள் உடன் செல்ல அனுமதி உள்ளது. அரசியல் கட்சிகளின் சந்தேகங்களை கலைய முகவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது தொந்தரவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

மகாத்மா காந்தி பிறந்த ஊரான போர்பந்தரையும் அவரது அஸ்தி கரைக்கப்பட்ட கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையில் நெல்லை வழியாக நேரடி ரயில் சேவையை இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது நெல்லையிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு திங்கள், செவ்வாய் கிழமைகளில் வாராந்திர ரயில்கள் செல்கின்றன. மற்ற ஐந்து தினங்களில் ரயில் சேவை இல்லை எனவே போர்பந்தருக்கு ரயில் இயக்க கோரிக்கை.

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அடுத்த 2026 – 27ம் கல்வி ஆண்டில் ஐஐடி என்ஐடி உள்ளிட்ட உயர்த்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பி டெக் சேர்க்கைக்கு ஜே இ இ மெயின் தேர்வுக்கு நவம்பர் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in இன்று இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மைய விவரம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
Sorry, no posts matched your criteria.