India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை வழியாக கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மே.8 முதல் ஜூன்.26 வரை வியாழக்கிழமை தோறும் பகல் 1:30 மணிக்கு குமரியில் புறப்படும். மறு மார்க்கத்தில் புதன்கிழமை தோறும் மே.7 முதல் ஜூன்.25 வரை மும்பையில் இருந்து புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மாலை, இரவு நேரங்களில் கோடை மழை அவ்வப்போது இடி மின்னலுடன் பெய்வதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நெல்லை மின்வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல், மழையின் போது மின்மாற்றிகள், மின்சாதனங்கள் மற்றும் மரங்களின் கீழ் நிற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மின் சேவைக்கு 9445859032, 9445859033, 9445859034 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கு பூலாங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நேற்று மாலை டூவிலரில் பாளை குலவணிகர்புரம் மாசிலாமணி நகரில் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்தார். அப்போது இவரது டூவிலர் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி 3200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டது. தமிழகத்தின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 25 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பு நெல்லை மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாட்டின் ‘பசுமை ஆற்றலின் தலைநகரம்’ என்ற பெருமையுடன் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பல்வகை தொழில்துறைகளுக்கான முதன்மை மையமாகவும் நெல்லை அமைந்துள்ளது. *ஷேர் பண்ணுங்க மக்களே*
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி இன்று விடுத்துள்ள உத்தரவில் மாநகரப் பகுதியில் போலீஸ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் படி முன் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, போராட்டம், போன்றவற்றை நடத்துவதற்கும் முன் அனுமதியின்றி கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று முதல் வருகிற மே 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நெல்லையில் இருட்டுக்கடையின் உரிமத்தை வரதட்சணையாக கேட்பதாக மாநகர காவல்துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா மாநகர துணை ஆணையரிடம் மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது கணவர் லண்டனுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி இன்று (ஏப்23) தெரிவித்துள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாநகரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 95 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 10 குழு வட்ட அங்கன்வாடி பணியாளர்கள், 50 உதவி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் www.icds.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாநகரில் நேற்று இரவு முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் புறநகர் பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு நெல்லை வழியாக இயக்கப்படும் காச்சிகுடா – நாகர்கோவில் சிறப்பு ரயில் வண்டி எண் (07435/ 36) ஜூன் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.