Tirunelveli

News April 25, 2025

அரசு பேருந்துடன் மினி லொடு வேன் மோதி விபத்து

image

திசையன்விளையில் இருந்து நவ்வலடி நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நவ்வலடியிலிருந்து திசையன்விளை நோக்கி வந்த மினி லோடு வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லோடி வேன் சாலையில் கவிழந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News April 25, 2025

நெல்லை வெற்றிகரமாக நடக்கும் அறுவை சிகிச்சை

image

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில் Dual Chamber Pacemaker அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றும் தற்போது வரை 25 நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று (ஏப்.25) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை 25 தடவை இந்த அறுவை சிகிச்சை, நெல்லை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News April 25, 2025

நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 158 % மழை

image

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வழக்கமான மழை அளவான 41.30 மில்லி மீட்டரை விட 158.83% அதிகம் ஆகும். நடப்பு ஏப்ரல் மாதத்தில் 23ஆம் தேதி வரை 63.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 5.51% கூடுதல்.

News April 25, 2025

நெல்லை: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *நெல்லை மக்களே மறக்காமல் அப்பளை பண்ணுங்க*

News April 25, 2025

26ஆம் தேதி வெறி நோய் தடுப்பூசி முகாம்

image

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரியில் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் அடையலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

News April 25, 2025

சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு போலீசார் விசாரணை

image

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி ராமசாமி கோவில் மேல தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரி செல்வி (54). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் (32) என்பருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டதில் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று (ஏப்.24) மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையில் கிருஷ்ணன் சுந்தரி செல்வி முதுகில் அரிவாளால் வெட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

News April 25, 2025

26ஆம் தேதி திருநங்கைகளுக்கு குறைதீர் முகாம் 

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு 26.04.2025 அன்று திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் சுகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News April 24, 2025

நெல்லை செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் வசதி

image

பயணிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லை – செங்கோட்டை ரயிலில் எம்.பி ராபர்ட் புரூஸ் நேற்று பயணம் செய்தார். அப்போது, ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை உடனடியாக ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு, இன்று முதல் 6 கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என எம்.பி தெரிவித்தார். இதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News April 24, 2025

ரயில்வே கூட்டத்தில் நெல்லை எம்பி பங்கேற்பு

image

மதுரையில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்று நெல்லைக்கு தேவையான பல கோரிக்கைகளை முன்வைத்தார். இதில் தென்கை ரயில்வே பொது மேலாளர் சரத் ஶ்ரீவத்சா,  மதுரை கோட்ட மேலாளர் சிவகுமார், தலைமை முதன்மை இயக்க மேலாளர் அஜய் கெளசிக், துணை பொது மேலாளர் சுசில்குமார் மௌரியர உள்பட பலர் ங்கேற்றனர்.

News April 24, 2025

+2 கணினி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

நெல்லையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர், கணினி இயக்குபவர் காலி இடத்திற்கு 1 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் +2 தேர்ச்சி மற்றும் கணினி படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே.6 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!