India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பல்வேறு கட்சி விஐபிகள் இன்று முகாமிட்டுள்ளனர். டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல் 1) மாலை தாழையூத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக வாகை சந்திரசேகர் அம்பை பகுதியில், தங்கபாலு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் முக்கூடல் பகுதியிலும், கனிமொழி வள்ளியூர் பகுதியிலும் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வானிலை ஆய்வு மையம் மழை, வெள்ளம், வெயில் போன்ற பருவநிலைகளை கணிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த டிச. மாத மழை வெள்ளத்துக்கு பின்னர் இந்த வானிலை ஆய்வு மையம் செயல்படவில்லை என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார். மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் இதை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காந்திஸ்வரன் புதூரை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் ஜேசிபி வைத்து ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார். இவரது ஜேசிபி திடீரென திருடுபோனது. இது குறித்து இவர் அளித்த புகாரின்படி கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிந்து தென்காசி மாவட்டம் சுரண்டை துவரங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரை நேற்று (மார்ச் 31) கைது செய்தார். ஜேசிபியை பறிமுதல் செய்தார்.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நாளை (ஏப்.1) நெல்லைக்கு வருகை தர உள்ளார். அதன்படி நாளை (ஏப்.1) ராதாபுரம் பகுதியிலும் நாளை மறுதினம் (ஏப்.2) டவுன் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு வருகிற 19ஆம் தேதி தமிழகத்தின் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரம் கிராம மக்கள் தங்கள் கோயில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதை கண்டித்து மக்களவை பொதுத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான பேனர்களை தங்கள் கிராமப் பகுதியில் கட்டி உள்ளனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் 29) டவுன் சந்திப்பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கினார். அப்பொழுது சுவாமி தரிசனம் செய்த பொழுது விபூதி தட்டில் பணம் வைத்த புகைப்படம் “ஓட்டிற்கு பணம் கொடுத்தாரா நயினார்”என்ற தலைப்பில் தற்போது நெல்லையில் வைரலாகி வருகின்றது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்சம் 16 பட்டன்கள் மட்டுமே உள்ளன. திருநெல்வேலியில் மக்களவைத் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் நிலை உருவாகி உள்ளது. தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தினர் செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் சிவசங்கர் கூலி தொழிலாளி. கடந்த சில தினமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிவசங்கர் நேற்று இரவு கல்லிடை அருகே காட்டுமன்னார்கோவில் ரயில்வே கேட் பகுதியில் செங்கோட்டை ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து, அவர் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் குரூஸுக்கு ஆதரவாக வருகிற 6 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையில் நடைபெறும் பொது கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில்
கருஉருமாரி சுப்பிரமணியர் முன்பாக
“வேல் விருத்தம்
மயில் விருத்தம்”
நிகழ்ச்சி நாளை (ஏப்ரல்.1) மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது.
திருவுரு மாமலை
பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார். இதில், பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.