Tirunelveli

News April 20, 2024

காவலர்களுக்கு மருத்துவ முகாம்: எஸ்பி அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (ஏப்.21) திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிவித்துள்ளார்.

News April 20, 2024

நெல்லைக்கு இன்று வருகை தரும் பிரபலம்

image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (ஏப்.20) மாலை 10வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி பிரபலமும், சமூக ஆர்வலருமான கே.பி.ஒய்.பாலா நெல்லைக்கு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

News April 20, 2024

நெல்லைப்பர் கோவிலில் அன்னதான பக்தர்களுக்கு வசதி

image

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னதான கூடத்தில் அன்னதானத் திட்டத்திற்கு வருகை தரும் பயனாளிகள் வசதிக்காக நிழற்கூரையுடன் கூடிய வரிசை அமைப்பு மதுரை ஜேகே பின்னர் லிமிடெட் நிறுவனத்தினர் மூலம் உபயமாக இன்று (ஏப்.20) வழங்கப்பட்டது. இதில் திருக்கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் ஜே.கே.பென்னர் நிறுவன நிர்வாக மேலாளர் இக்னேஷியஸ் பங்கேற்றனர்.

News April 20, 2024

ஓட்டு சதவீதம் குறைவு: காரணம் இதுவா?

image

அனைத்து பகுதிகளிலும் நேற்று பார்லி பார்லிமென்ட் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. இதில் நெல்லை பார்லிமென்ட் தொகுதியில் பாளை பகுதியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. கடும் வெயில் காரணமாக வாக்காளர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து வாக்கு அளிப்பதை தவிர்த்து உள்ளனர். பலருக்கு பூத் சிலிப் கிடைக்காததால் வாக்களிக்க வரவில்லை என அதிகாரிகள் இன்று (ஏப்.20) தெரிவித்தனர்.

News April 20, 2024

3 நாளுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

image

பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி முதல் நெல்லை, பாளை உட்பட அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஓட்டுப்பதிவை முன்னிட்டு நேற்று வரை மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்படும். வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இவ்வாறு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஏப்.20) தெரிவித்தார்.

News April 20, 2024

அமைதியான ஓட்டு பதிவு: அதிகாரிகள் விளக்கம்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஒலிபெருக்கி மூலம் வாக்காளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி கொண்டிருந்தனர். இதனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டுப்பதிவு சுமுகமாக நடந்ததாக அதிகாரிகள் இன்று (ஏப்.20) தெரிவித்தனர்.

News April 20, 2024

நன்றி அறிக்கை வெளியிட்ட மாநகர செயலாளர்

image

திருநெல்வேலி தொகுதியில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவரின் வெற்றிக்கு உழைத்த நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாநகர திமுக சார்பு அணி நிர்வாகிகளுக்கு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (ஏப்.19) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

நன்றி அறிக்கை வெளியிட்ட அதிமுக வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவரின் வெற்றிக்கு கடந்த ஒரு மாதமாக உழைத்த திருநெல்வேலி மாவட்ட அதிமுக மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி நேற்று (ஏப்.19) நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 19, 2024

நெல்லையில் 70.46% வாக்குப்பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.  இதில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமுடன் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 70.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

வாக்குச்சாவடியில் நீண்ட “க்யூ”

image

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாமல் நடைபெற்றது. சில இடங்களில் தொடர்ச்சியாக மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் எஸ் ஏ புனித உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாலை ஐந்து மணிக்கு மேலும் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்து வாக்களித்தனர்.

error: Content is protected !!